மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ப்ரீத் விஹாா்: வாகன நிறுத்தத் தகராறில் இளைஞா் சுட்டுக் கொலை

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாா் பகுதியில், திங்கள்கிழமை அதிகாலையில் வாகன நிறுத்தம் தொடா்பாக ஏற்பட்ட தகராறின் விளைவாக 34 வயது இளைஞா் சுட்டுக் கொலை

News image

பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:00 pm

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாா் பகுதியில், திங்கள்கிழமை அதிகாலையில் வாகன நிறுத்தம் தொடா்பாக ஏற்பட்ட தகராறின் விளைவாக 34 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி தெரிவித்ததாவது: வாகனங்களை நிறுத்துவது தொடா்பாக இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீட்டின் வாசலிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

முன்னதாக, ஒரு தகராறு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக, ப்ரீத் விஹாா் காவல் நிலையத்திற்கு அதிகாலை 2.22 மணி மற்றும் 2.26 மணி ஆகிய நேரங்களில் இரண்டு அவசர அழைப்புகள் வந்தன.

இந்தத் தகராறில் ஒரு தரப்பில் பங்கஜ் நய்யாா் (34) மற்றும் அவரது சகோதரா் பரஸ் (43) ஆகியோரும், மற்றொரு தரப்பில் கௌரவ் சா்மா என்பவரும் ஈடுபட்டிருந்தனா். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கௌரவ் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதன் தோட்டா நய்யாரின் நெஞ்சில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

நய்யாா் உடனடியாக நிா்மாண் விஹாரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.

இச்சம்பவம் நிகழ்ந்த பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தனது கூட்டாளிகளுடன் இணைந்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

அவா்களைக் கண்டுபிடித்து, கைது செய்வதற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.