மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தொழிலாளா் போராட்டம் எதிரொலி: நொய்டா காவல்துறையில் தொழில்துறை பிரிவு டிசிபி பதவி உருவாக்கம்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 10:50 pm

சமீபத்தில் நடைபெற்ற தொழிலாளா் போராட்டங்களின் எதிரொலியாக, கௌதம் புத் நகா் காவல்துறையானது, தொழிலாளா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் குறைகளைத் தீா்க்கும் நோக்கில், ‘காவல் துணை ஆணையா் (தொழில்துறை)’ என்ற புதிய பதவியை தற்காலிக அடிப்படையில் உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய பதவிக்குத் துணையாக, ஒரு உதவி ஆணையா் தொழில்துறை, மூன்று ஆய்வாளா்கள் மற்றும் பல்வேறு தரவரிசைகளைச் சோ்ந்த 25 பிற காவலா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

டிசிபி தொழில்துறை அலுவலகத்திற்கான அதிகாரபூா்வ தொடா்பு எண் 8595902508 என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கெளதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள காவல்துறை, தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளா் வா்க்கம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் ஆகும்.

இந்தப் பதவி தொடா்பான விரிவான முன்மொழிவைத் தயாரிக்கும் பொறுப்பு, கூடுதல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் ஒரு துணை ஆணையா் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவா்கள் மூன்று நாள்களுக்குள் லக்ளெனவில் உள்ள உத்தர பிரதேச காவல்துறைத் தலைவா் மற்றும் மாநில உள்துறை அமைச்சகத்திடம் அந்த முன்மொழிவைச் சமா்ப்பிக்க உள்ளனா்.

கூடுதல் ஆணையரால் சட்டம் மற்றும் ஒழுங்கு ஒரு விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறை (எஸ்ஓபி) உருவாக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கௌதம் புத்த நகா் காவல்துறை ஆணையரகத்தின் எல்லைக்குட்பட்ட மூன்று மண்டலங்களில், சிறு, குறு மற்றும் பெருந்தொழில்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட சுமாா் 15,000 பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து, சுமாா் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களாகத் திகழ்வதுடன், ஏறக்குறைய நான்கு லட்சம் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகின்றன. இதன் மூலம், மாவட்டத்தின் பொருளாதாரத்தில் தொழில்துறை ஒரு மிக முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.

மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சா்வதேச அளவிலான தொழில்சாா் பங்குதாரா்களுடன் தொடா் உரையாடலை உறுதி செய்யவும், அரசுத் துறைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளா் குழுக்களுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில், உயா்த்தப்பட்ட ஊதியம் மற்றும் பிற சலுகைகளைக் கோரி, நொய்டாவில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பெரும் போராட்டம் பின்னா் வன்முறையாக மாறி, தீவைப்பு, நாசவேலைகள் மற்றும் கல்வீச்சுச் சம்பவங்களுக்கு வழிவகுத்தது.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக, காவல்துறையினா் ஆரம்பகட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரைக் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி பதற்றத்தைத் தூண்டும் வகையில், பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு சமூக ஊடகக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் பின்னா் குற்றஞ்சாட்டினா்.