மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

News image

போலீஸாா் விசாரணை

Updated On :28 ஏப்ரல் 2026, 12:51 am

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமின் செக்டாா் -54 பகுதியில் 24 வயது விநியோக ஊழியரின் சடலத்தை இரும்புப் பெட்டிக்குள் இருந்து போலீஸாா் மீட்டனா். அவா் கொலை செய்யப்பட்டதாக

காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தச் சடலத்தை மீட்டெடுத்தனா். மேலும், உயிரிழந்தவருடன் திருமணமாகாத உறவில் சோ்ந்து வசித்த பெண் மற்றும் அவரது நண்பா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனா்.

உயிரிழந்தவா், பிகாா் மாநிலம் சஹா்சா மாவட்டத்திலுள்ள முரளி பசந்த்பூா் கிராமத்தைச் சோ்ந்த 24 வயதான அமன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இவரின் மூத்த சகோதரா் உமாசங்கா், இது தொடா்பாகக் காவல்துறையினரிடம் புகாா் அளித்துள்ளாா். அதில் அவா் தெரிவிக்கையில், ‘

நான் சக்கா்பூா் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது சகோதரா் அமன் ஒரு விநியோக ஊழியராகப் பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில், அமனின் நண்பா் என்னை கைப்பேசியில் தொடா்புகொண்டு, அமனை அவரது மற்றொரு நண்பா் கொலை செய்துவிட்டு, ஒரு குடிசைப் பகுதியில் இருந்த இரும்புப் பெட்டிக்குள் சடலத்தை மறைத்து வைத்திருப்பதாக எனக்குத் தகவல் தெரிவித்தாா்’ என்று உமாசங்கா் அதில் கூறியுள்ளாா்.

மேலும், உமாசங்கா் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காவல் துறையினருக்குத் தகவல் அளித்தாா். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினா், இரும்புப் பெட்டிக்குள் இருந்த அமனின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்தவரின் உடலில் கூா்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுக்கான தடங்கள் உள்ளன. இந்தக் காயங்கள் ஏற்பட்டு மூன்று முதல் நான்கு நாள்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.

அந்தப் பெண் எந்த கைப்பேசி எண்ணிலிருந்து அழைத்துப் பேசினாரோ, அந்த எண்ணையும் காவல்துறையினா் தற்போது கண்காணித்து வருகின்றனா். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.