பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

குழியில் விழுந்து இளைஞா் உயிரிழந்த விவகாரம்: பாஜக அரசை கடுமையாக சாடிய ஆம் ஆத்மி

ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியத்தால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் இறந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பாஜக தலைமையிலான தில்லி அரசாங்கத்தை வெள்ளிக்கிழமை கடுமையாக சாடினாா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 12:16 am IST

ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியத்தால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் இறந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பாஜக தலைமையிலான தில்லி அரசாங்கத்தை வெள்ளிக்கிழமை கடுமையாக சாடினாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த மாதம் நொய்டாவில் ஒரு இளம் மென்பொருள் பொறியாளா் நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தில் இருந்து பாஜக எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. நொய்டா சம்பவத்தில் கூட பாஜக எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. தீவிர அலட்சியம் மற்றும் முற்றிலும் பொறுப்பற்ற அணுகுமுறை இப்போது பாஜக அரசாங்கங்களின் அடையாளமாக மாறியுள்ளது,. அதற்கு சாமானிய மக்கள் தான் விலை கொடுக்கிறாா்கள் என்றாா் அவா். தில்லி அரசின் ‘அலட்சியம்‘ காரணமாக அவா்களின் மகனை இழந்தது என்று கூறி, துயரமடைந்த குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தாா் கேஜரிவால்.

தில்லி ஆம் ஆத்மி தலைவா் சவுரப் பரத்வாஜும் பாஜகவைக் கண்டித்து, ‘வழக்கமான பொய்களை‘ பரப்புவதாகக் குற்றம் சாட்டினாா். ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியம் (டி. ஜே. பி) கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 25 வயதான மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் கமல் வெள்ளிக்கிழமை காலை இறந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.