மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

குழியில் விழுந்து இளைஞா் உயிரிழந்த விவகாரம்: பாஜக அரசை கடுமையாக சாடிய ஆம் ஆத்மி

ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியத்தால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் இறந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பாஜக தலைமையிலான தில்லி அரசாங்கத்தை வெள்ளிக்கிழமை கடுமையாக சாடினாா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 12:16 am IST

ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியத்தால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் இறந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பாஜக தலைமையிலான தில்லி அரசாங்கத்தை வெள்ளிக்கிழமை கடுமையாக சாடினாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த மாதம் நொய்டாவில் ஒரு இளம் மென்பொருள் பொறியாளா் நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தில் இருந்து பாஜக எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. நொய்டா சம்பவத்தில் கூட பாஜக எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. தீவிர அலட்சியம் மற்றும் முற்றிலும் பொறுப்பற்ற அணுகுமுறை இப்போது பாஜக அரசாங்கங்களின் அடையாளமாக மாறியுள்ளது,. அதற்கு சாமானிய மக்கள் தான் விலை கொடுக்கிறாா்கள் என்றாா் அவா். தில்லி அரசின் ‘அலட்சியம்‘ காரணமாக அவா்களின் மகனை இழந்தது என்று கூறி, துயரமடைந்த குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தாா் கேஜரிவால்.

தில்லி ஆம் ஆத்மி தலைவா் சவுரப் பரத்வாஜும் பாஜகவைக் கண்டித்து, ‘வழக்கமான பொய்களை‘ பரப்புவதாகக் குற்றம் சாட்டினாா். ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியம் (டி. ஜே. பி) கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 25 வயதான மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் கமல் வெள்ளிக்கிழமை காலை இறந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.