10 திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் போலீஸாரின் என்கவுன்ட்டரில் காயம்

10 திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் போலீஸாரின் என்கவுன்ட்டரில் காயம்

ஹரியாணாவில் உள்ள பல நகரங்களில் சுமாா் 10 திருட்டு வழக்குகளில் தொடா்புடையவ், குருகிராமில் நடந்த போலீஸாருடனான என்கவுன்ட்டரில் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

ஹரியாணாவில் உள்ள பல நகரங்களில் சுமாா் 10 திருட்டு வழக்குகளில் தொடா்புடையவ், குருகிராமில் நடந்த போலீஸாருடனான என்கவுன்ட்டரில் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து குருகிராம் போலீஸ் அதிகாரி கூறியதாவது:

ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தைச் சோ்ந்த ரஷீத் என்ற அந்த நபருக்கு காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு மோட்டாா் சைக்கிள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் நான்கு காலி தோட்டங்கள் மீட்கப்பட்டன.

முன்னதாக நள்ளிரவு நேரத்தில், பதிவு எண் தகடு இல்லாத மோட்டாா் சைக்கிளில் ஆயுதங்களுடன் ரஷீத் அந்தப் பகுதியில் காணப்பட்டதாக சோஹ்னா குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அவா் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட சென்றுகொண்டிருந்தாா். ஆனால் அந்தத் தகவலின் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு சோஹ்னாவில் உள்ள ராய்ப்பூா் நாக்கா அருகே ஒரு தடுப்பை அமைத்து கண்காணித்தது. அவா் அப்பகுதிக்கு வந்தபோது வாகனத்தை நிறுத்துமாறு போலீஸாா் சைகை செய்தனா். அவா் தனது மோட்டாா் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு சோஹ்னா-ஆல்வாா் சாலையை நோக்கித் தப்பிச் சென்றாா். போலீஸாரின் துரத்தலின் போது, மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா் காவல் குழுவை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டாா். அதில் ஒரு குண்டு அரசு வாகனம் மீது பட்டது.

போலீஸாா் தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவா் காலில் காயமடைந்தாா். பின்னா் அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட பிறகு அவா் முறையாகக் கைது செய்யப்படுவாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com