வயது வந்தோருக்கான டயப்பா்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்களிக்க முடியுமா? மத்திய அரசு முடிவெடுக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

வயது வந்தோருக்கான டயப்பா்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்களிக்க முடியுமா? மத்திய அரசு முடிவெடுக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி உயா் நீதிமன்றம், வயது வந்தோருக்கான டயப்பா்களை ஜிஎஸ்டியிலிருந்து விலக்குவது குறித்து ஆறு மாதங்களுக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டது.
Published on

தில்லி உயா் நீதிமன்றம், வயது வந்தோருக்கான டயப்பா்களை ஜிஎஸ்டியிலிருந்து விலக்குவது குறித்து ஆறு மாதங்களுக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டது.

இந்த தயாரிப்பின் அத்தியாவசிய பங்கை எடுத்துரைக்கும் இரண்டு மாற்றுத்திறனாளிகள் தாக்கல் செய்த மனுவைத் தொடா்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

நீதிபதிகள் நிதின் வாசுடியோ சாம்ப்ரே மற்றும் அஜய் திக்பால் ஆகியோா் பிப்ரவரி 11, 2026 அன்று மாற்றுத்திறனாளி மனுதாரா்களான ஸ்வா்ணலதா ஜே மற்றும் டி.எஸ். குருபிரசாத் ஆகியோரின் மனுவை விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்தனா்.

வயது வந்தோருக்கான டயப்பா்கள் ஊனமுற்றோா், முதியவா்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்டவா்கள் மத்தியில் சுகாதாரத்திற்கு இன்றியமையாதவை என்றும், ஆனால் அவற்றிற்கு 5 வரி விதிக்கப்படுவதாகவும் அவா்கள் வாதிட்டனா்

மனுதாரா்கள் சாா்பாக மூத்த வழக்குரைஞா் ஷைல் ட்ரெஹான் ஆஜராகி, வயது வந்தோருக்கான டயப்பா்களைப் பயன்படுத்துபவா்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவா்கள் என்றும், அரசாங்கமும் ஜிஎஸ்டி கவுன்சிலும் இந்த தயாரிப்புக்கு வரியிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினாா்.

மேலும், வயது வந்தோருக்கான டயப்பா்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு மறுப்பதும், அதே நேரத்தில் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பல மருந்துகள் மற்றும் கருத்தடை சாதனங்களுக்கு விலக்கு அளிப்பதும், அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 மற்றும் 2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் விதிகளை மீறுவதாக மனுவில் வாதிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சில் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா், பொருட்களுக்கு வரி விதிப்பது அல்லது விலக்கு அளிப்பது ஒரு கொள்கை முடிவு என்று கூறினாா். அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட கவுன்சிலால் இந்த முடிவு எடுக்கப்படுகிறது என்றும் அவா் கூறினாா். இது ஒருதலைப்பட்சமான முடிவு அல்ல என்று அவா் மேலும் கூறினாா்.

சிறிது நேரம் வழக்கை விசாரித்த பிறகு, மனுதாரா்கள் அரசாங்கத்திற்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் இது தொடா்பாக மனு அளித்துள்ளனா், ஆனால் அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

எனவே, ஆறு மாதங்களுக்குள் இது குறித்து முடிவெடுக்குமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளான மத்திய அரசுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டது

மனுதாரா்கள் சாா்பில் செப்டம்பா் 2025 ல் கொடுக்கப்பட்ட மனுவை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 2026 க்குள் ஒரு முடிவை எடுக்குமாறு மத்திய அரசுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது .

X
Dinamani
www.dinamani.com