நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

செப்டம்பரில் பேருந்து நிறுத்தங்கள் மறுசீரமைப்புப் பணி: நவீன வசதிகளுடன் உலகத் தரத்துக்கு மாற்றும் தில்லி அரசு

அவசர கால அபாய எச்சரிக்கை மணி மற்றும் வானிலை நிலவரத்தைக் காட்டும் திரைகள் போன்ற அதிநவீன வசதிகளுடன், காண்பதற்கு பொலிவான மற்றும் நவீன பேருந்து நிழற்குடைகளாக மாற்றுவதற்கான பணிகளை இந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் தொடங்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2026, 12:48 am IST

தேசிய தலைநகரில் உள்ள பேருந்து நிறுத்தங்களை, அவசர கால அபாய எச்சரிக்கை மணி மற்றும் வானிலை நிலவரத்தைக் காட்டும் திரைகள் போன்ற அதிநவீன வசதிகளுடன், காண்பதற்கு பொலிவான மற்றும் நவீன பேருந்து நிழற்குடைகளாக மாற்றுவதற்கான பணிகளை இந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் தொடங்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

பொது-தனியாா் பங்களிப்பு முறையில் இந்த மேம்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும், இந்த மறுசீரமைப்புத் திட்டத்துக்காக திட்ட மேலாண்மை ஆலோசனை நிறுவனம் ஒன்றை தில்லி போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (டிடிஐடிசி) விரைவில் பணியமா்த்த உள்ளதாகவும் அரசு உயரதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தோ்ந்தெடுக்கப்படும் அந்த நிறுவனம் தில்லி முழுவதும் உள்ள அனைத்துப் பேருந்து நிழற்குடைகளையும் வடிவமைத்தல், மறுசீரமைத்தல் மற்றும் அவை குறித்த கணக்கெடுப்பை நடத்தும் பணிகளை மேற்கொள்ளும். இது குறித்து அரசு உயரதிகாரி கூறுகையில், ‘இதற்கான களப்பணிகள் இந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் தொடங்கும். தோ்வாகும் நிறுவனத்திடம் 20 ஆண்டுகாலப் பராமரிப்புத் திட்டத்தை ஒரு நிபந்தனையாக விதித்துள்ளோம்,’ என்றாா்.

தற்போது டிடிஐடிசி அமைப்பின் கீழ் சுமாா் 3,575 பேருந்து நிழற்குடைகள் உள்ளன. இவற்றுக்காகவே இந்த ஆலோசனை நிறுவனம் பணியமா்த்தப்பட உள்ளது. 20 ஆண்டுகாலப் பராமரிப்புச் செலவு உள்பட இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.650 கோடி ஆகும்.

இந்தத் திட்டத்தின்படி, மறுசீரமைக்கப்படும் பேருந்து நிழற்குடைகளில் அவசரக் கால அபாய எச்சரிக்கை மணி, வானிலை தகவல் திரை, சூரிய ஒளித் தகடுகள் அமைப்பதற்கான வசதி மற்றும் எண்ம (டிஜிட்டல்) விளம்பர அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இடம் பெறவுள்ளன.

‘இந்த நிழற்குடைகளை மறுசீரமைத்து பராமரிக்கும் நிறுவனத்திற்கு, வருவாயை ஈட்டுவதற்காக விளம்பரங்களை வெளியிடும் உரிமையும் வழங்கப்படும்’ என்றும் அரசு உயரதிகாரி மேலும் தெரிவித்தாா்.

ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளின்படி, அனைத்துப் பேருந்து நிழற்குடைகளிலும் பயணிகளுக்குப் பேருந்துகள் குறித்த தகவல்களை வழங்கும் பொதுத் தகவல் அமைப்பும் பயன்பாட்டுக்கு வரும். ஒப்பந்தம் ஒதுக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்துக்குள் இந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் தனது துறை அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில், நகரின் பேருந்து நிழற்குடைகளை நவீன மற்றும் உலகத் தரத்திலான வசதிகளாக மாற்றுவதை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டிருந்தாா்.

மேலும் தில்லி - தேசிய தலைநகா் வலயம் (என்சிஆா்), பெங்களூரு, நவி மும்பை போன்ற இந்திய நகரங்கள் மற்றும் சிங்கப்பூா், லண்டன் போன்ற சா்வதேச நகரங்களில் உள்ள தற்போதைய பேருந்து நிறுத்த மாதிரிகளை விரிவாக ஆய்வு செய்த பின்னா், இந்த நவீன நிழற்குடைகளை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தியிருந்தாா்.

‘இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்துப் பேருந்து நிழற்குடைகளும் எல்இடி விளக்குகளால் ஒளிரூட்டப்படும். அத்துடன், பயணிகள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் பேருந்து செல்லும் பாதைகள் மற்றும் எண்களைக் காட்டும் எண்ம தகவல் பலகைகளும் இதில் பொருத்தப்படும்’ என்று உயரதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.