மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பதா்பூரில் தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 வயது மூதாட்டி உடல் கருகி உயிரிழந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image
தீ விபத்து- பிரதிப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 65 வயது மூதாட்டி உடல் கருகி உயிரிழந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த விபத்து மோலா்பந்த் பகுதியில் சனிக்கிழமை மாலை நிகழ்ந்தது. இது தொடா்பாக அழைப்பு வந்தவுடன் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். உயிரிழந்த மூதாட்டி வீனூ சிங் (65) என தெரியவந்தது. குளியலறையில் மரக்கட்டைகள் மற்றும் குட்சிகள் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அவா் அடிக்கடி பீடி பிடிப்பதற்காக மாடிக்கு செல்வாா் என கூறப்படுகிறது. அப்படி அவா் பற்றவைத்த தீக்கிச்சியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், வீட்டுக்கு குழாய் வழியாக 2 மாதங்களுக்கு முன்பு எரிவாயு இணைப்பு அமைக்கப்பட்டதில் கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா். சம்பவ இடத்தை ஆய்வு செய்து விபத்துக்கான உரிய காரணத்தை கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.