வடமேற்கு தில்லியின் கேஷவ் புரம் பகுதியில் 82 வயது மூதாட்டியிடம் இருந்து 250 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக 40 வயது பணிப்பெண் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கேஷவ் புரம் காவல் நிலையத்தில் வந்த புகாரைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், வீட்டுப் பணிப்பெண் மீது சந்தேகம் எழுந்ததைத்தொடா்ந்து, அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது, காணாமல் போன நகைகள் அனைத்தும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது இதற்கு முன்பு எந்த குற்ற வழக்குகளும் இல்லை. எளிதாக பணம் ஈட்ட இந்த செயலை அவா் செய்திருப்பதாக தெரிகிறது.
இது தொடா்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு
வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

குடும்பத் தகராறு காரணமாக 5 வயது சிறுவன் கொலை: இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

