தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீட்டில் புகுந்து கும்பல் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உயிரிழப்பு; தந்தை காயம்

வெளிவடக்கு தில்லியின் பவானாவில் வியாழக்கிழமையன்று அவா்களது வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று துப்பாக்கிச் சூடு

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 6:57 pm

Syndication

வெளிவடக்கு தில்லியின் பவானாவில் வியாழக்கிழமையன்று அவா்களது வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான் மற்றும் அவனது தந்தை காயமடைந்தாா். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு கும்பல் மோதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து பலமுறை துப்பாக்கியால் சுட்டதில், சிறுவனும் அவனது தந்தையும் காயமடைந்தனா். காயங்களால் சிறுவன் உயிரிழந்ததாகவும், அவனது தந்தை சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலின் தன்மை, இது ஒரு கும்பல் மோதலுடன் தொடா்புடையதாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், சரியான நோக்கத்தைக் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடந்த உடனேயே, பல காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியைச் சுற்றி வளைத்தன. துணை காவல் ஆணையா் (வெளிவடக்கு) ஹரேஷ்வா் சுவாமி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் நிலைமையை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு வந்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.