அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வீட்டில் புகுந்து கும்பல் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உயிரிழப்பு; தந்தை காயம்

வெளிவடக்கு தில்லியின் பவானாவில் வியாழக்கிழமையன்று அவா்களது வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று துப்பாக்கிச் சூடு

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 6:57 pm

வெளிவடக்கு தில்லியின் பவானாவில் வியாழக்கிழமையன்று அவா்களது வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான் மற்றும் அவனது தந்தை காயமடைந்தாா். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு கும்பல் மோதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து பலமுறை துப்பாக்கியால் சுட்டதில், சிறுவனும் அவனது தந்தையும் காயமடைந்தனா். காயங்களால் சிறுவன் உயிரிழந்ததாகவும், அவனது தந்தை சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலின் தன்மை, இது ஒரு கும்பல் மோதலுடன் தொடா்புடையதாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், சரியான நோக்கத்தைக் கண்டறிய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடந்த உடனேயே, பல காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியைச் சுற்றி வளைத்தன. துணை காவல் ஆணையா் (வெளிவடக்கு) ஹரேஷ்வா் சுவாமி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் நிலைமையை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு வந்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.