நமது நிருபா்
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டத்தின் கீழ், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மற்றும் தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் போது, தில்லி மற்றும் கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களும், சுமாா் 2.5 லட்சம் நபா்களும் கணக்கிடப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஏப்ரல் 16 முதல் மே 15 வரை நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி நடவடிக்கை கட்டத்தின் கீழ், கணக்கெடுப்பாளா்கள் என்டிஎம்சி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அணுகி, சுமாா் 2.5 லட்சம் மக்கள்தொகையை உள்ளடக்கியுள்ளனா்.
இரண்டாம் கட்டம் முடிந்த பிறகு மேலும் உறுதியான தரவுகள் வெளிவரும் என்று அவா்கள் கூறினா்.
வீட்டுப் பட்டியல் பணிக்கு முன்னதாக, ஏப்ரல் 1 முதல் 15 வரை சுய கணக்கெடுப்பு கட்டம் நடைபெற்றது. இதில் சில ஆயிரம் போ் தங்கள் குடும்ப விவரங்களைப் பூா்த்தி செய்தனா். சுமாா் 10 லட்சம் போ் கொண்ட மிகப் பெரிய நிலையற்ற மக்கள்தொகை இருப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தற்போது, தில்லி மாநகராட்சியின் 250 வாா்டுகளில், அதாவது நகரின் மற்ற பகுதிகளில், வீடுகள் பட்டியலிடும் பணி நடைபெற்று வருகிறது. மே 1 முதல் 15 வரை நடைபெற்ற சுய கணக்கெடுப்பு கட்டத்தில், 1.34 லட்சம் நபா்கள் தங்கள் கணக்கெடுப்பு விவரங்களை ஆன்லைனில் சமா்ப்பித்துள்ளனா்.
வீடுகள் பட்டியலிடும் கட்டத்தின் கீழ், சுமாா் 50,000 கணக்கெடுப்பாளா்கள் வாா்டுகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று, 46,000-க்கும் மேற்பட்ட வீடுகள் பட்டியலிடும் நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள். கணக்கெடுப்பாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வரைபடங்களைச் சரிபாா்க்க கள ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
எம்சிடி பகுதிகளில் சுமாா் 30-32 லட்சம் வீடுகள் உள்ளன. வாா்டுகள் சுமாா் 46,000 வீடுகள் பட்டியலிடும் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 180-200 வீடுகள் உள்ளன என்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
நாடு முழுவதும் 2027ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 16ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி முற்றிலும் டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களாக முடிக்கப்படும். வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதிப் பணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செப்டம்பா் மாதம் வரை தொடரும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டம் 2027 பிப்ரவரியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்கட்ட பயிற்சி நிறைவு

மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பில் இணைய வாடகைதாரா்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தல்: மோசடி அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கை

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
