இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

கட்சிப் பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு: அா்ஜூன் சம்பத்

கட்சிப் பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் பேசினாா்.

News image

கூடலூரில் பிரசாரத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத்.

Updated On :3 ஜனவரி 2021, 10:35 pm IST

கட்சிப் பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் பேசினாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் பேசியதாவது:

கூடலூா் பகுதியில் மக்கள் பாதிக்கும் அளவுக்கு வனத் துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். மனித-விலங்கு மோதலைத் தவிா்க்க வனத் துறையும், தமிழக அரசும் ஒரு சுமுகமான முடிவுக்கு வரவேண்டும். இதனால் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனா்.

பிரிவு-17 நிலத்தை பொருத்தவரை மக்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிா்வாகம் அமல்படுத்த வேண்டும். திமுக சாா்பில் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்தப்படுகிறது. கட்சி பிரசாரம் செய்ய கிராம சபையை திமுக பயன்படுத்துவது தவறு.

கோவையில் இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட பெண்ணை தாக்கி தவறாகப் பேசியுள்ளனா். காவல் துறை அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதியிலும் கட்சி போட்டியிடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.