தீக்குள் விரலை வைத்தேன்-சி.மகேந்திரன்; பக்.312; ரூ.150; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98, )044-26251968.
புதியபார்வை இதழில் தொடராக வெளிவந்த பயணக்கட்டுரை என்றாலும், இலங்கையின் வரலாற்றையும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வையும் கண்முன் நிறுத்துகிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலையே, "தீக்குள் விரலை வைத்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழீழத்துக்கும் ஒரே நம்பிக்கையாக இருந்த தலைவன் இன்றில்லை. ஒரு பெருந்தீ, சூழ்ச்சியால் அணைக்கப்பட்டு, நீறுபூத்த நெருப்பு கண்மறைவாய் கனன்று கொண்டிருக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த நூலுக்குத் துணைக்கட்டுரையில் (பூவரசு பூ பூக்கும்) நூலாசிரியர் குறிப்பிடுவதைப்போல, ""மனித வாழ்க்கை வாழை மரத்தைப் போன்றது. வாழைத் தோப்புகள் வெளித்தோற்றத்துக்கு அழிந்துவிட்டதைப்போல தோற்றம் தரும். ஆனால், உண்மையில் அவை அழிவதில்லை'' அந்த நம்பிக்கை வீண்போகாது என்பதை இந்நூலைப் படிப்பவரால் உணர முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


