தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

குறுந்தொகை

குறுந்தொகை: பதிப்பு வரலாறு (1915-2010)-இரா. அறவேந்தன்; பக்.232; ரூ.180; நற்றிணை: பதிப்பு வரலாறு (1915-2010)- க.பாலாஜி; பக்.104; ரூ.84; கலித்தொகை: பதிப்பு வரலாறு (1887-2010) - மு.முனீஸ்மூர்த்தி; பக்.22

Updated On :9 செப்டம்பர் 2025, 10:38 am IST

குறுந்தொகை: பதிப்பு வரலாறு (1915-2010)-இரா. அறவேந்தன்; பக்.232; ரூ.180; நற்றிணை: பதிப்பு வரலாறு (1915-2010)- க.பாலாஜி; பக்.104; ரூ.84; கலித்தொகை: பதிப்பு வரலாறு (1887-2010) - மு.முனீஸ்மூர்த்தி; பக்.224; ரூ.170; அகநானூறு: பதிப்பு வரலாறு (1918-2010) - மா.பரமசிவன்; பக்.160; ரூ.120; பரிபாடல்: பதிப்பு வரலாறு (1918-2010) - ம.லோகேஸ்வரன்; பக்.120; ரூ.90; காவ்யா, சென்னை-24; )044 23726882.

எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை ஆகியவைகளின் பதிப்பு வரலாற்றை முழுவதுமாகக் கூறும் தனித்தனித் தொகுப்பு. எட்டுத்தொகை நூல்கள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாகப் பலராலும் ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டும், அறிமுகப்படுத்தப்பட்டும், பல்வேறு கால கட்டங்களில் பலரால் பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. அவைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஒவ்வொரு நூலும் ஆண்டுகள் வரையறையோடு கூடிய பதிப்புடன் நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவைகளில் உள்ள பாடல்களுக்குத் தலைப்பிடல், கூற்று, திணை, புலவர் பெயர்க்காரணம், வரலாறு, வழக்காறு, இலக்கணக் குறிப்பு, உவமை, ஒப்புமையாக்கம், மேற்கோள் உள்ளிட்ட பல கூறுகளை உரையாசிரியர்களும், பதிப்பாசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர் எனக் கண்டறிந்து, அவைகளை எளிமையாகவும், தெளிவாகவும் நூலாசிரியர்கள் விளக்கியுள்ளனர். விரிவான பின்னிணைப்பு, தெளிவான நூல் பட்டியல் போன்றவை இடம்பெற்றிருப்பது, எட்டுத்தொகை நூல்கள் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் பயன்தரும். நூலாசிரியர்களின் அரிய முயற்சியும், கடின உழைப்பும் ஒவ்வொரு நூலிலும் பளிச்சிடுகின்றன.

திராவிட மொழிகளில் ஆராய்ச்சி - எஸ். வையாபுரிப்பிள்ளை; பக்.72; ரூ.40; அலைகள் வெளியீட்டகம், சென்னை-24; 044-24815474.

1946-ம் ஆண்டில் நாகபுரியிலும், 1951-ம் ஆண்டில் இலட்சுமணபுரியிலும் நடைபெற்ற அகில இந்திய கீழ்நாட்டுக் கலைஞரின் மாநாடுகளில் தமிழறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆற்றிய தலைமையுரைகளின் தமிழ் வடிவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.