கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மனமும் மனிதனும்

மனமும் மனிதனும் - தமிழருவி மணியன்; பக்.128; ரூ.45; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044- 2431 4347. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆசைகளின்றி வெற்றிடமாகப் பிறக்கும் மனிதனின் மனதில் "ஆசை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:03 am

மனமும் மனிதனும் - தமிழருவி மணியன்; பக்.128; ரூ.45; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044- 2431 4347.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆசைகளின்றி வெற்றிடமாகப் பிறக்கும் மனிதனின் மனதில் "ஆசை' என்ற மிருகம் குடியேறி விடுகிறது. அகோரப் பசி கொண்ட அந்த மிருகம், மனிதன் இருக்கும் வரையிலும், இறக்கும் வரையிலும் அவனை விடுவதாக இல்லை. அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மனிதனை அடக்கும் ஓர் அங்குசமாகவே வெளி வந்திருக்கிறது தமிழருவி மணியனின் இந்தப் புத்தகம்.

எது தற்போதைய தேவையோ அது இப்புத்தத்தில் விரவிக் கிடக்கிறது. வாழ்வு பற்றி தனக்குள் எழுந்த சிந்தனைகளை மிக விரிவாக விளக்கியிருக்கிறார். வாழ்வியல் தத்துவங்களை உரசி தீப்பொறி ஏற்படுத்தி உங்களுக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.

அன்பு, பாசம், மனிதம், நட்பு, காதல், சமூகம் என்று வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் இந்தப் புத்தகம் தொட்டுச் செல்கிறது.

"மனதை மாற்றும் மந்திரச் சாவி' இந்த மனமும், மனிதனும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.