எங்கிருந்து தொடங்குவது?- அ.வெண்ணிலா; பக்.144 ; ரூ.100; அகநி வெளியீடு, எண்.3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி - 604 408.
குடும்ப வாழ்வில் கணவன் - மனைவிக்கு இடையிலான உறவில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகள், அவற்றிற்கான காரணங்கள் இந்நூலில் ஆராயப்பட்டிருக்கின்றன. அன்பும், காதலும் குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் எத்தனை கணவன் - மனைவிக்கிடையே அது அடிப்படையாக இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.
குடும்பத்தில் ஆணின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது, பெண் வீட்டு வேலைக்காரியாக உழைத்து உழைத்து மாய்ந்து போவது, பெண்ணின் கருத்துகள், உணர்வுகள் மதிக்கப்படாதது, இந்த ஆணாதிக்க குடும்ப அமைப்பைக் காட்டிக் காக்க காலங்காலமாக நிலவும் கருத்துகள் என பலவிஷயங்களைப் பற்றி இந்நூல் சொல்லும் ஆழமான விமர்சனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
குடும்ப அமைப்புக்கும் சாதிமுறைக்கும் உள்ள தொடர்பு, சாதி மீறி திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள், ஒவ்வொரு சாதிக்கும் உரிய சடங்குகள், பழக்க, வழக்கங்கள், அவற்றால் குடும்ப அமைப்பு பாதுகாக்கப்படுவது என நூலின் ஆராய்ச்சி எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
குடும்பம் ஒரு சிறையாக இருக்கக் கூடாது, ஆணும் பெண்ணும் விரும்பவில்லை என்றால் பிரிந்து வாழலாம்; கட்டாயத்தின் பேரில் இணைந்து வாழக் கூடாது என்று கூறும் இந்நூல், இன்றுள்ள குடும்பம் என்பதற்கான வரையறைகளை மாற்றி, குடும்ப அமைப்புக்கு புதிய பொருள் தர வேண்டும் என்று சொல்கிறது. இன்றைய குடும்ப வாழ்க்கையைப் பற்றிய விமர்சனரீதியான, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளின் வெளிப்பாடு இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி ரேஷன் அரிசி கொள்முதலில் ஊழல்! விசாரணை நடத்த வேண்டும்: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

மருத்துவமனைக் கட்டட அனுமதிக்கு 15 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி இளநிலை உதவியாளா் கைது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

அரசுத் திட்டப் பணிகளை நிறைவேற்ற அலுவலா்கள் ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் என்.ஆனந்த்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



