நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல் - நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன்; பக்.168; ரூ.150; முல்லை பதிப்பகம், 323/ 10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய நான்கு உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியவர் நூலாசிரியர். அவர் பல்வேறு மேடைகளில் ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய நூல் மதிப்புரைகள், கட்டுரைகள், இலங்கை நாளிதழான "வீரகேசரி' க்கு அளித்த நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
நூலாசிரியரின் சீரிய கருத்துகள் இந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும், தற்கொலை முயற்சியைக் குற்றமற்றதாகக் கருதலாமா? பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007 கூறுவது என்ன? பெண்களுக்கான சட்ட உரிமைகள் எவை? என்று நீதி, சட்டம் தொடர்பான பல கட்டுரைகளும், உரைகளும் ஒருபுறம் என்றால், திருவாசக ஆய்வுக்களஞ்சியம் நூலை வெளியிட்டு வழங்கிய வாழ்த்துரை, மூவர் தேவார தமிழிசை விழாவில் ஆற்றிய உரை, மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய உரை என தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் இன்னொருபுறம் நம்மை வியக்க வைக்கின்றன. அண்ணாதுரை, கருணாநிதி, நீதிக்கட்சி, திராவிட இயக்கம் தொடர்பான நூலாசிரியரின் கருத்துகள் இடம் பெற்றுள்ள கட்டுரைகளும் உள்ளன. நூலாசிரியரின் பல்துறை சார்ந்த ஈடுபாடும், தெளிவும் வியக்க வைக்கிறது.
எந்தவொரு கருத்தை எடுத்துக் கொண்டாலும் அதை அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து நடைமுறை சாத்தியமான தீர்வுகளை நூலாசிரியர் வழங்கியிருப்பது சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







