தண்டவாளம் - ச.சுரேஷ்; பக். 190, ரூ.200; சந்தியா பதிப்பகம், சென்னை - 83; 044- 24896979.
கணினி அறிவியல் தொழில்நுட்பம் பயின்று அமெரிக்காவில் குடிபுகுந்த தமிழரான ச.சுரேஷ் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் பல
கட்டுரைகளை அவர் எழுதியிருந்தாலும், 40 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் எழுதியிருக்கும் சிறுகதைகள் இவை. எழுத்து நடையும், மொழி ஆளுமையும் சிறுகதைகளில் கையாளப்பட்டிருக்கின்றன.
நூல் முழுவதும் பெண்ணியம் சார்ந்த விஷயங்களும், அவர்களது உளவியல் போராட்டங்களும் பேசப்பட்டிருக்கின்றன. கதையின் மாந்தர்கள் நம்மைச் சுற்றியிருக்கும் சக உறவுகளைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதால் வாசகனிடம் அவை நெருக்கம் கொள்கின்றன.
பிச்சைக்காரி, சித்ரா பெளர்ணமி, தாரணி, மெளனமான கதறல், தண்டவாளம் உள்ளிட்ட சிறுகதைகள் வாசிப்புக்குப் பிறகு நினைவு அடுக்குகளில் நிறைந்து கொள்ளும் ரகம். சமூகத்தில் சமுத்துவம் இல்லாமல் போனதற்கும், பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதற்கும் தன்னை சரியானவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தவறுகள்தான் காரணம் என்ற உண்மையை இக்கதைகள் உணர்த்துகின்றன.
பெண்ணியத்தை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி வெளிவரும் படைப்புகளுக்கு நடுவே பெண்களின் உள்ளார்ந்த வலிகளை உணர்த்தும் பதிவாக வெளிவந்திருக்கிறது தண்டவாளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்!

ஆட்ட நாயகன் விருதை பும்ராவுக்கு சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

டிரம்ப் முன்னால் பேசுவதற்கு தைரியமில்லை: பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

