ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

தண்டவாளம் - ச.சுரேஷ்;  பக். 190, ரூ.200; சந்தியா பதிப்பகம்,  சென்னை - 83; 044- 24896979. 

கணினி அறிவியல் தொழில்நுட்பம் பயின்று அமெரிக்காவில் குடிபுகுந்த தமிழரான ச.சுரேஷ் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் பல 
கட்டுரைகளை அவர் எழுதியிருந்தாலும், 40 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில்  எழுதியிருக்கும் சிறுகதைகள் இவை.  எழுத்து நடையும், மொழி ஆளுமையும் சிறுகதைகளில் கையாளப்பட்டிருக்கின்றன.

நூல் முழுவதும் பெண்ணியம் சார்ந்த விஷயங்களும், அவர்களது உளவியல் போராட்டங்களும் பேசப்பட்டிருக்கின்றன. கதையின் மாந்தர்கள் நம்மைச் சுற்றியிருக்கும் சக உறவுகளைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதால் வாசகனிடம் அவை நெருக்கம் கொள்கின்றன.

பிச்சைக்காரி, சித்ரா பெளர்ணமி, தாரணி, மெளனமான கதறல், தண்டவாளம் உள்ளிட்ட சிறுகதைகள் வாசிப்புக்குப் பிறகு நினைவு அடுக்குகளில் நிறைந்து கொள்ளும் ரகம். சமூகத்தில் சமுத்துவம் இல்லாமல் போனதற்கும், பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதற்கும் தன்னை சரியானவர்கள்  என நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தவறுகள்தான் காரணம் என்ற உண்மையை இக்கதைகள் உணர்த்துகின்றன.

பெண்ணியத்தை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி வெளிவரும் படைப்புகளுக்கு நடுவே பெண்களின் உள்ளார்ந்த வலிகளை உணர்த்தும் பதிவாக வெளிவந்திருக்கிறது தண்டவாளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.