சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

அன்பின் முகங்கள் - எம்.டி.வாசுதேவன் நாயர் (தமிழில் - குறிஞ்சிவேலன்);  பக்.240; ரூ.250; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை-17; ✆ 97910 71218.

மலையாள இலக்கிய உலக ஆளுமை யான  நூலாசிரியர்,  சாகித்திய அகாதெமி, ஞானபீடம் விருதுகளைப் பெற்றவர். இவரது தேர்ந்தெடுத்த  12 சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல். 
மூலக்கதையை அச்சுப்பிசகாமல் மொழியாக்கம் செய்யும் திறன் படைத்த குறிஞ்சிவேலனின் எழுத்துகள்.  

9 ஆண்டுகளுக்குப் பின்னர்  தனது மனைவியின் சிகிச்சைக்காக, பூர்விகச் சொத்து  தொடர்பாக அண்ணனைக் காண செல்லும் தம்பியின் உணர்வுகளும் உரையாடல்களும் கொண்ட சிறுகதையின் பெயர்தான் 'அன்பின் முகங்கள்'.   சிறுவயது சகோதர மோதல், அத்தை மகளை மணமுடிப்பது.. என்று ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சம்பவங்களும் படிக்கும்போதே நெஞ்சில் 
நிழலாடுகிறது. 

தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் 'முகத்திரை',    தனிமையில் உறவுகளை நினைத்து யோசிக்கும் 'அந்தி வெளிச்சம்',   25 ஆண்டுகளுக்குப் பின்னர் தனிமையில் வசிக்கும் தந்தையைத் தேடி செல்லும் ராகவனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'சருகுகள் மூடிய',  இலங்கைக்குச் செல்லும் பயணியின் நினைவுகளை வெளிப்படுத்தும் 'கடுகண்ணாவா; ஒரு பயணக்குறிப்பு',  தாயும் பாட்டியும் இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடும் இளைஞரின் பாச நினைவுகளை வெளிக்கொணரும் 'ஒரு பிறந்தநாள் நினைவு',  பண்டிகை கொண்டாடத்துக்காக ஏங்கும் சிறுவனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'பட்டாசு'  ... என்று ஒவ்வொரு கதையும் ஒவ்வோர் விஷயங்களை வெளிப்படுத்துகிறது.

கதைகளைப் படிக்கும்போது, நம் உறவுகளில் நடைபெற்ற நிகழ்வுகள் கண்களில் நிழலாடுகின்றன.  நூலாசிரியரின் பிற நூல்களைப் படிக்கும் ஆவலை இந்த நூல் தூண்டிவிடுகிறது. சிறுகதை பிரியர்களுக்கு சந்தோஷமான அனுபவம்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.