சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

முடங்கலில் மலர்ந்த மலர்கள் - பேராசிரியர் தி.இராசகோபாலன்;  பக்.208; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.

தமிழ் இலக்கியத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவிர்க்க முடியாத சக்தியான நூலாசிரியர் கரோனா காலத்தில் முடங்கிக் கிடக்காமல் 28 கட்டுரைகளை எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.

அம்பேத்கர், விளாத்திக்குளம் சுவாமிகள்,  கேசவதாஸ், பஞ்சாப்பின் தேஜ்பகதூர் சிங், மகாராணா பிரதாப் சிங், எம்ஜிஆர், நாணயவியல் அறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  திருலோக சீதாராம், என்.சங்கரய்யா, கலாசேத்ரா கலைவாணி, பெரியவர் கோரா உள்பட 13 ஆளுமைகளைப் பற்றி பல்வேறு அரிய விஷயங்களை நூலாசிரியர் எடுத்துரைத்திருக்கிறார்.

ஆளுமைகளைக் குறிப்பிட்ட அதே வேளையில், திருக்குறள்,  சைவ, வைணவத்தின் பெருமைகள் குறித்த ஆன்மிகக் கட்டுரைகள் அதிசயிக்க வைக்கின்றன.  உடல், மன வலிமைகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரே சாதனம் ரமலான் நோன்பு என்பதை விளக்கும் 'ரமலானின் மகத்துவம்' எடுத்துரைக்கிறது. 

செய்யும் தொழிலே தெய்வம், ஆயுதபூஜை, மத்திய மாநில உறவுகள், உளவு ஆய்தல், பெருந்துயரின் பிடியில் சிக்கிய நாடோடிகள், பாரதத்தைத் தாக்கிய புற்றுநோய்... போன்ற கட்டுரைகள் சமூகத்தின் அவலத்தை ஆராய்கின்றன

புரட்டினால் சுவாரசியமாகவும், படிக்கவே பெருமிதமாகவும் எழுத்து நடையால் நூலாசிரியர் கவருகிறார்.  அரசியல், ஆன்மிகம், இலக்கியம், ஈகை குணம், உழைப்பு... என்று பல்வேறு விஷயங்களை ஒற்றை நூலில் அளித்து வாசகர்களை வியக்க வைத்திருக்கிறார்.  ஒற்றை நூலில் ஓராயிரம் தகவல்களை அறிய இந்த நூலை வாசிக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.