எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புத்தகம் என்னவெல்லாம் செய்யும்?

வாசிப்பு, எழுத்தில் அக்கறை கொண்ட அனைவரையும் இந்நூல் ஈர்க்கும்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:31 pm

DIN

புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? - சோம.வள்ளியப்பன்; பக். 240; ரூ.260; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆044-4200 9603.

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி எழுத்தாளர்களுக்கும், வாசிப்பை நேசிப்போருக்கும் ஒரு வரப் பிரசாதம் என்றால் அது மிகையில்லை. தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் அதுவொரு முக்கியமான அத்தியாயமாகும். புத்தகக் கண்காட்சியில் தனது வாசகர்களுடனான நேரடி அனுபவத்தை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

ஒரு புத்தகத்திலிருந்து வாசகர்கள் என்ன மாதிரியான அனுபவங்களைப் பெறுகிறார்கள் என்பதோடு மட்டுமல்லாது, வாசகர்களிடமிருந்து ஓர் எழுத்தாளர் என்ன பெற்றுக் கொள்கிறார் என்பதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்திருப்பது சுவாரஸ்யமாக்குகிறது.

கையெழுத்துப் பிரதி நடத்தியது, தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளில் நூலாசிரியரின் சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரமானது; சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட நூலாசிரியரின் ஒவ்வோர் அனுபவமும் எழுத்தின் மீதான அவரது தீரா ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

கைலாசபுரம் இலக்கிய வட்ட நிகழ்வுகளுக்கு எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரை உரையாற்ற நூலாசிரியர் அழைத்து வந்தது முதல் அவர்களுக்கு நன்றி தெரிவித்தது வரையிலான நினைவுகளை சுவைபட விவரித்துள்ளார். ஒரு படைப்பாளராக தனது துறை சார்ந்து நூலாசிரியர் எழுதியிருக்கும் இதுபோன்றதொரு தனித்துவமான அனுபவத் தொகுப்பு வாசிப்புத் தளத்தில் புதுமையானதொரு முயற்சி.

வாசிப்பு, எழுத்தில் அக்கறை கொண்ட அனைவரையும் இந்நூல் ஈர்க்கும்.

புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? - சோம.வள்ளியப்பன்; பக். 240; ரூ.260; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆044-4200 9603.

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி எழுத்தாளர்களுக்கும், வாசிப்பை நேசிப்போருக்கும் ஒரு வரப் பிரசாதம் என்றால் அது மிகையில்லை. தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் அதுவொரு முக்கியமான அத்தியாயமாகும். புத்தகக் கண்காட்சியில் தனது வாசகர்களுடனான நேரடி அனுபவத்தை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

ஒரு புத்தகத்திலிருந்து வாசகர்கள் என்ன மாதிரியான அனுபவங்களைப் பெறுகிறார்கள் என்பதோடு மட்டுமல்லாது, வாசகர்களிடமிருந்து ஓர் எழுத்தாளர் என்ன பெற்றுக் கொள்கிறார் என்பதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்திருப்பது சுவாரஸ்யமாக்குகிறது.

கையெழுத்துப் பிரதி நடத்தியது, தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளில் நூலாசிரியரின் சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரமானது; சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட நூலாசிரியரின் ஒவ்வோர் அனுபவமும் எழுத்தின் மீதான அவரது தீரா ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

கைலாசபுரம் இலக்கிய வட்ட நிகழ்வுகளுக்கு எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரை உரையாற்ற நூலாசிரியர் அழைத்து வந்தது முதல் அவர்களுக்கு நன்றி தெரிவித்தது வரையிலான நினைவுகளை சுவைபட விவரித்துள்ளார். ஒரு படைப்பாளராக தனது துறை சார்ந்து நூலாசிரியர் எழுதியிருக்கும் இதுபோன்றதொரு தனித்துவமான அனுபவத் தொகுப்பு வாசிப்புத் தளத்தில் புதுமையானதொரு முயற்சி.

வாசிப்பு, எழுத்தில் அக்கறை கொண்ட அனைவரையும் இந்நூல் ஈர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.