டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஸி.வி.ஸ்ரீராமனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 8:45 am

DIN

ஸி.வி.ஸ்ரீராமனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - ஸி.வி.ஸ்ரீராமன்  (தமிழில் - த. விஷ்ணுகுமாரன்) பக்.736; ரூ. 1000; சாகித்திய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை 18; ✆ 044-24311741.

சாகித்திய அகாதெமி விருதுபெற்றவரின் 75 மலையாளச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. பல்வேறு சமூகங்கள்,  இடச்சூழல்களை பின்னணியாகக் கொண்டு  தனிமனித உளவியல் நிலையும், சூழல்களுக்கு ஏற்ப அவர்கள் செயல்படும் விதமும் கதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி பெரும்பாலான கதைகள் குறுக்கு வழிகளில் உயர்நிலையை அடைவதற்கு முயலும் மனிதர்களின் முகத்தை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளன. அதுபோல சில கதைகள் கம்யூனிச இயக்க போக்கையும் வெளிக்காட்டியுள்ளது.  ஆண், பெண் பாலியல் மீறல்கள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

கதைமாந்தரின் பெயரை குறிப்பிடாமல் கதையின் போக்கிலேயே அவர்களின் விவரங்கள், சூழ்நிலைகள், மனநிலைகளை அறிந்து கொள்ளும் வகையில் பெரும்பாலான கதைகள் அமைந்துள்ளன.  இப்படிப்பட்ட பெயர்கள் இருந்தனவா என்று எண்ணத்தோன்றும் வகையில் இதர பாத்திரங்களின் பெயர்கள் புனையப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கதையும் இந்தியாவின் பல மாநிலங்களில் நடப்பது போன்று அமைந்துள்ளதால் அந்தந்தப் பகுதியின் பழக்கவழக்கங்களும், மொழிகளும் கதைகளின் ஊடே கடந்து செல்கின்றன.

உரைநடை விளக்கங்கள் பெருமளவு இன்றி, ஒருவருக்கொருவர் பேசுவது போன்றே கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அந்த தளத்தில் பயணிக்கும் போது கதைகளின் தாக்கம் நம்மையும் பற்றிக் கொள்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.