சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

திருக்குறளில் இன்றைய மேலாண்மை - இரா.மனநாதன். பக்.205; ரூ.249: நோஷன் பிரஸ்.காம் (வலைதளம்).

திருக்குறள் எழுதப்பட்ட காலம் தொடங்கி இனிவரும் காலம் வரை அனைவராலும் எடுத்தாளப்படும் பல கருத்துகளை கொண்டுள்ளது. இன்றைய காலத்தில் ஒரு நிறுவனத்தை மேலாண்மை செய்யும் வகையில் திட்டமிடல், ஆராய்ச்சிப் பயன்முறை, வணிகமுறை, சொல்வன்மை உள்ளிட்ட கருத்துகளை ஆசிரியர் குறள்கள் வழியே விளக்கியுள்ளார். வள்ளுவர் ஒரு அரசனுக்குக் கூறிய அறிவுரைகளைக் கூர்ந்து நோக்கினால் அவை அனைத்தும் இன்றைய மேலாண்மைக்கு வெகுவாகப் பொருந்தி வருகிறது என்பது ஒரு வியத்தகு உண்மை.

குறிப்பாக அமைச்சு, ஒற்றாடல், தூது போன்ற குறள்கள் இன்றைய மேலாண்மைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன. தற்போதைய தொழில் வளர்ச்சியில் புத்தொழில் தொடங்க  கூட இன்றைய இளைஞர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் திருக்குறளின் வழியே புத்தாக்கத்தை தருகிறார் நூலாசிரியர்.

ஒரு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், மேலாளர் அதன் பணியாளர்களை வழிநடத்தும் முறைகளையும், நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் உத்திகளையும் விவரிக்கிறார். இந்நூலில் காணப்படும் பணியாளர்களிடையே நேர்மை எண்ணத்தை வளர்ப்பது, சரியான முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்திக் கொள்வது மற்றும் தலைசிறந்த சேவைகளை அளிப்பது போன்ற உட்கருத்துகள் இன்றைய மாறிவரும் வணிக உலகுக்கு மிகவும் ஏற்புடையதாகவுள்ளன.

ஒவ்வொரு குறளுக்கும் அதற்கு ஏற்ற நிகழ்கால எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் முன்வைப்பது வாசகருக்கு கூடுதல் ஆர்வத்தை தூண்டுகிறது. தொழில், வணிகத் தலைவர்கள், உரிமையாளர்கள், வணிகத் துறை மாணவர்கள் என அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.