பசும்பொன் பதித்த சுவடுகள் - இராசா அருண்மொழி; பக்.128; ரூ.140; காவ்யா, சென்னை-24; ✆ 98404 80232.
தென் மாவட்ட மக்களால் கடவுளாக வழிபடப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய நூல்களில் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. அவர் மறைந்து
அறுபது ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என்கிறார் நூலாசிரியர்.
பார்வர்டு பிளாக் கட்சியின் தோற்றத்திலிருந்தாலும் இடதுசாரி சிந்தனையாளர், ஆன்மிகப் பேரொளி, கொடைவள்ளல், தேசியவாதி, தமிழ்ப் பற்றாளர்.. என்று அவரை வர்ணிக்கும் நூலாசிரியர், தேவர் தனது கடைசிக்காலத்தில், 'மனிதனின் யோக்கியதையை நிர்ணயிப்பது பணம், பெண், அதிகாரத்தின் மீது ஒருவன் பூண்டுள்ள நிலைப்பாடு; அம்மூன்றுமே தனக்குத் துச்சம்' என்று கூறியதை எடுத்தியம்புகிறார்.
தேவரின் வரலாற்றோடு, நேதாஜி, காமராஜர், சைதன்யர், சிவாஜி கணேசன் போன்றோருடனான அவரது நட்பு, மக்கள் பணி, தேர்தல் களம் போன்றவற்றை அதற்குரிய அரிய புகைப்படங்களோடு நூலாசிரியர் விவரித்துள்ளார்.
தேவர் குறித்து அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்றோர் குறிப்பிட்டதையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். சன்மார்க்கம், குற்றப் பரம்பரைச் சட்டம் போன்றவை குறித்த விளக்கமும் சிறப்பு. 'விவேகமில்லாத வீரம் முரட்டுத்தனம் - வீரமில்லாத விவேகம் கோழைத்தனம்' என்ற தேவரின் கோட்பாட்டை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். அவருக்கு சொந்தமான 32 கிராமங்களின் பட்டியல் வியக்கவைக்கிறது. தேவர் ஜெயந்தி, குரு பூஜைகளையும் பதிவு செய்து நூலை நிறைவு செய்துள்ளார்.
'தேர்தல் களத்தில் வாக்கு கேட்டுச் சென்றதில்லை; தோல்வியையும் தழுவியதில்லை' என்ற தேவரின் வாழ்க்கையைத் தமிழர்கள் அனைவரும் அறிவது அவசியமானது.
பசும்பொன் பதித்த சுவடுகள் - இராசா அருண்மொழி; பக்.128; ரூ.140; காவ்யா, சென்னை-24; ✆ 98404 80232.
தென் மாவட்ட மக்களால் கடவுளாக வழிபடப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய நூல்களில் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. அவர் மறைந்து
அறுபது ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என்கிறார் நூலாசிரியர்.
பார்வர்டு பிளாக் கட்சியின் தோற்றத்திலிருந்தாலும் இடதுசாரி சிந்தனையாளர், ஆன்மிகப் பேரொளி, கொடைவள்ளல், தேசியவாதி, தமிழ்ப் பற்றாளர்.. என்று அவரை வர்ணிக்கும் நூலாசிரியர், தேவர் தனது கடைசிக்காலத்தில், 'மனிதனின் யோக்கியதையை நிர்ணயிப்பது பணம், பெண், அதிகாரத்தின் மீது ஒருவன் பூண்டுள்ள நிலைப்பாடு; அம்மூன்றுமே தனக்குத் துச்சம்' என்று கூறியதை எடுத்தியம்புகிறார்.
தேவரின் வரலாற்றோடு, நேதாஜி, காமராஜர், சைதன்யர், சிவாஜி கணேசன் போன்றோருடனான அவரது நட்பு, மக்கள் பணி, தேர்தல் களம் போன்றவற்றை அதற்குரிய அரிய புகைப்படங்களோடு நூலாசிரியர் விவரித்துள்ளார்.
தேவர் குறித்து அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்றோர் குறிப்பிட்டதையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். சன்மார்க்கம், குற்றப் பரம்பரைச் சட்டம் போன்றவை குறித்த விளக்கமும் சிறப்பு. 'விவேகமில்லாத வீரம் முரட்டுத்தனம் - வீரமில்லாத விவேகம் கோழைத்தனம்' என்ற தேவரின் கோட்பாட்டை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். அவருக்கு சொந்தமான 32 கிராமங்களின் பட்டியல் வியக்கவைக்கிறது. தேவர் ஜெயந்தி, குரு பூஜைகளையும் பதிவு செய்து நூலை நிறைவு செய்துள்ளார்.
'தேர்தல் களத்தில் வாக்கு கேட்டுச் சென்றதில்லை; தோல்வியையும் தழுவியதில்லை' என்ற தேவரின் வாழ்க்கையைத் தமிழர்கள் அனைவரும் அறிவது அவசியமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாளை.யில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு விவகாரம்: 3 போ் கைது

தொழில் செ(ய்)ய விரும்பு

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

இலக்கியக் கொள்கைகள்
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

