சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புலவர் வே. பதுமனார் தம் மாணாக்கர் கற்றதும் பெற்றதும்

மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 68 மாணவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 1:09 pm

DIN

புலவர் வே. பதுமனார் தம் மாணாக்கர் கற்றதும் பெற்றதும்; பக்.200; விலை குறிப்பிடவில்லை; புலவர் வே. பதுமனார் 90-ஆம் பிறந்த நாள் பெருமங்கலம் பதுமராக விழாக் குழு, குடியேற்றம் - 632602; ✆ 993490703.

தமிழில் ஓர் ஆசிரியரை நினைவுகூர்ந்து மாணவர்களால் எழுதப் பெற்ற கட்டுரைகளைக் கொண்ட இந்த வகையிலான தொகுப்பு நூலொன்று வெளிவருவது அனேகமாக இதுவே முதலாவதாக இருக்கலாம்.

குடியேற்றத்தில் திருவள்ளுவர் மேனிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது 90-ஆவது பிறந்த நாள் கொண்டாடிய ஆசிரியர் புலவர் வே. பதுமனார் பற்றிய அவருடைய மாணாக்கர்களின் நினைவுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்து நூலாக்கியுள்ளனர்.

40, 50 ஆண்டுகளுக்கு முன் பதுமனாரிடம் பயின்றவர்கள் எல்லாரும் இன்னமும்கூட அவருடன் தொடர்பில் இருப்பதும், அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்து நெக்குருகுவதும் இன்றைய தலைமுறையை வியப்பில் ஆழ்த்தக் கூடியவையாகும்.

மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 68 மாணவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பதுமனாரிடம் கற்றதும் பெற்றதும் பற்றி மாணவர்கள் குறிப்பிடுகிற ஒவ்வொன்றும் ஆசிரியர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற மேன்மையைச் சுட்டுகின்றன.

எரிதழல் என்ன தொகை என இலக்கண வகுப்பை நினைவுகூர்கிறார் ஒருவர். என் தமிழுக்கு அவரே காரணம்; தமிழுக்கான முதல் வித்தை ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்தவர் என்கிறார் இன்னொருவர். 7 மதிப்பெண்களை 70 ஆக மாற்றிக் காட்டியதை ஒருவர் குறிப்பிட, ஆசிரியரின் தனிப்பயிற்சி வகுப்புகளின் சிறப்புகளைப் பலரும் சிறப்பிக்கின்றனர். இவ்வாறு ஏராளமான விஷயங்கள்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் ஆசிரியர் - மாணவர்கள் உறவு என்பது எந்த அளவுக்கு நெருக்கமாகவும் உயிர்ப்புள்ளதாகவும் இருந்திருக்கிறது என்பதை இன்றைய மாணவர்களும் இளைஞர்களும், ஏன் ஆசிரியர்களும்கூட, உணர்ந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் வாசிக்கப்பட வேண்டிய 'பாட' நூல்.

புலவர் வே. பதுமனார் தம் மாணாக்கர் கற்றதும் பெற்றதும்; பக்.200; விலை குறிப்பிடவில்லை; புலவர் வே. பதுமனார் 90-ஆம் பிறந்த நாள் பெருமங்கலம் பதுமராக விழாக் குழு, குடியேற்றம் - 632602; ✆ 993490703.

தமிழில் ஓர் ஆசிரியரை நினைவுகூர்ந்து மாணவர்களால் எழுதப் பெற்ற கட்டுரைகளைக் கொண்ட இந்த வகையிலான தொகுப்பு நூலொன்று வெளிவருவது அனேகமாக இதுவே முதலாவதாக இருக்கலாம்.

குடியேற்றத்தில் திருவள்ளுவர் மேனிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது 90-ஆவது பிறந்த நாள் கொண்டாடிய ஆசிரியர் புலவர் வே. பதுமனார் பற்றிய அவருடைய மாணாக்கர்களின் நினைவுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்து நூலாக்கியுள்ளனர்.

40, 50 ஆண்டுகளுக்கு முன் பதுமனாரிடம் பயின்றவர்கள் எல்லாரும் இன்னமும்கூட அவருடன் தொடர்பில் இருப்பதும், அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்து நெக்குருகுவதும் இன்றைய தலைமுறையை வியப்பில் ஆழ்த்தக் கூடியவையாகும்.

மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 68 மாணவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பதுமனாரிடம் கற்றதும் பெற்றதும் பற்றி மாணவர்கள் குறிப்பிடுகிற ஒவ்வொன்றும் ஆசிரியர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற மேன்மையைச் சுட்டுகின்றன.

எரிதழல் என்ன தொகை என இலக்கண வகுப்பை நினைவுகூர்கிறார் ஒருவர். என் தமிழுக்கு அவரே காரணம்; தமிழுக்கான முதல் வித்தை ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்தவர் என்கிறார் இன்னொருவர். 7 மதிப்பெண்களை 70 ஆக மாற்றிக் காட்டியதை ஒருவர் குறிப்பிட, ஆசிரியரின் தனிப்பயிற்சி வகுப்புகளின் சிறப்புகளைப் பலரும் சிறப்பிக்கின்றனர். இவ்வாறு ஏராளமான விஷயங்கள்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் ஆசிரியர் - மாணவர்கள் உறவு என்பது எந்த அளவுக்கு நெருக்கமாகவும் உயிர்ப்புள்ளதாகவும் இருந்திருக்கிறது என்பதை இன்றைய மாணவர்களும் இளைஞர்களும், ஏன் ஆசிரியர்களும்கூட, உணர்ந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் வாசிக்கப்பட வேண்டிய 'பாட' நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.