சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிற்பம் பேசும் வான்புகழ் வள்ளுவர் கோட்டம்

திருக்குறளின் மூன்று அதிகாரங்களை மையப்படுத்தி மிக நுணுக்கமாக வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டதை நூலாசிரியர் விவரிக்கிறார்.

News image
Updated On :3 மார்ச் 2025, 1:57 pm

DIN

சிற்பம் பேசும் வான்புகழ் வள்ளுவர் கோட்டம் - கோ. வீரபாண்டியன்; பக்.190; ரூ.250; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை-94; ✆ 044-4507 4203.

ஒரு வரலாற்றுப் பணியாக வள்ளுவர் கோட்டம் எழுந்த விதத்தை நூல் விவரிக்கிறது. வள்ளுவர் கோட்டம் தமிழர் கட்டடக் கலைக்கு சான்றாக வடிவமைக்கப்பட்டது.

திருக்குறள் முப்பாலைக் கூறுகிறது. அதன்பொருட்டு வள்ளுவர் கோட்டத்தின் முக்கியப் பகுதிகள் மும்மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன. கோட்ட அரங்கம், குறள் மணிமாடம், வேயா மாடம் என அரங்கம் மூன்று அடுக்குகளைக் கொண்டது.

வள்ளுவர் திருத்தேரின் அடிப்பகுதி, வள்ளுவர் திருவறை அமைந்துள்ள நடுப்பகுதி, கூறை என மூன்று நிலைகளைக் கொண்டது.

குறள் மணிமாடத்தில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் சாம்பல் நிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் செதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு திருக்குறளின் மூன்று அதிகாரங்களை மையப்படுத்தி மிக நுணுக்கமாக வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டதை நூலாசிரியர் விவரிக்கிறார்.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அப்போது நடைமுறையில் இல்லை என்பதால், வீரமாமுனிவரின் காலத்து தமிழே பதிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றபின், மாமல்லபுரத்துக்குச் சென்ற நிலையில், அங்குள்ள சிற்பிகள் படித்துவிட்டு வேலையற்று இருப்பதைக் கூறியதும், இந்த சிற்பிகளுக்கு மாத்திரமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து சிற்பிகளின் திறமைகளைப் பறைசாற்றும்விதமாக பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை வரலாறுகளாக வாழ்கின்றன.

'ஒரு சமுதாயத்தின் கலை, பண்பாடுகள் பேணிக் காக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பு அரசுக்கு இருப்பதால்தான் வள்ளுவர் கோட்டத்தை இங்கே உருவாக்க முனைந்திருக்கிறோம்' என அதன் கால்கோள் விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வள்ளுவர் கோட்டத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தொடங்கி காலம் கடந்த எனது பார்வை ஈறாக 8 தலைப்புகளில் வள்ளுவர் கோட்ட படைப்பு நிகழ்வுகள் மற்றும் 133 அதிகாரங்களுக்கும் சிற்பங்களைக் கொண்டு குறள் விளக்கக் காட்சி அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளது.

சிற்பம் பேசும் வான்புகழ் வள்ளுவர் கோட்டம் - கோ. வீரபாண்டியன்; பக்.190; ரூ.250; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை-94; ✆ 044-4507 4203.

ஒரு வரலாற்றுப் பணியாக வள்ளுவர் கோட்டம் எழுந்த விதத்தை நூல் விவரிக்கிறது. வள்ளுவர் கோட்டம் தமிழர் கட்டடக் கலைக்கு சான்றாக வடிவமைக்கப்பட்டது.

திருக்குறள் முப்பாலைக் கூறுகிறது. அதன்பொருட்டு வள்ளுவர் கோட்டத்தின் முக்கியப் பகுதிகள் மும்மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன. கோட்ட அரங்கம், குறள் மணிமாடம், வேயா மாடம் என அரங்கம் மூன்று அடுக்குகளைக் கொண்டது.

வள்ளுவர் திருத்தேரின் அடிப்பகுதி, வள்ளுவர் திருவறை அமைந்துள்ள நடுப்பகுதி, கூறை என மூன்று நிலைகளைக் கொண்டது.

குறள் மணிமாடத்தில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் சாம்பல் நிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் செதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு திருக்குறளின் மூன்று அதிகாரங்களை மையப்படுத்தி மிக நுணுக்கமாக வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டதை நூலாசிரியர் விவரிக்கிறார்.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அப்போது நடைமுறையில் இல்லை என்பதால், வீரமாமுனிவரின் காலத்து தமிழே பதிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றபின், மாமல்லபுரத்துக்குச் சென்ற நிலையில், அங்குள்ள சிற்பிகள் படித்துவிட்டு வேலையற்று இருப்பதைக் கூறியதும், இந்த சிற்பிகளுக்கு மாத்திரமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து சிற்பிகளின் திறமைகளைப் பறைசாற்றும்விதமாக பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை வரலாறுகளாக வாழ்கின்றன.

'ஒரு சமுதாயத்தின் கலை, பண்பாடுகள் பேணிக் காக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பு அரசுக்கு இருப்பதால்தான் வள்ளுவர் கோட்டத்தை இங்கே உருவாக்க முனைந்திருக்கிறோம்' என அதன் கால்கோள் விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வள்ளுவர் கோட்டத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தொடங்கி காலம் கடந்த எனது பார்வை ஈறாக 8 தலைப்புகளில் வள்ளுவர் கோட்ட படைப்பு நிகழ்வுகள் மற்றும் 133 அதிகாரங்களுக்கும் சிற்பங்களைக் கொண்டு குறள் விளக்கக் காட்சி அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.