சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆரியபட்டரிலிருந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை ஈர்ப்பு விசை சுருக்கமான வரலாறு

அறிவியல்பூர்வமாக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தரும் நூலாகவும் இது இருக்கிறது.

News image
Updated On :10 மார்ச் 2025, 12:16 pm

DIN

ஆரியபட்டரிலிருந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை ஈர்ப்பு விசை சுருக்கமான வரலாறு - த.வி.வெங்கடேஸ்வரன்; பக்.176; ரூ.250; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி; ✆04259-236030.

பூமியின் ஈர்ப்பு விசை தொடர்பான வரலாற்று பூர்வமான, அறிவியல்பூர்வமான பதிவு இந்நூல். பூமி தட்டையானது என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. ஆனால் இந்த கருதுகோளே அன்றைக்குப் பெரும் சாதனையாக இருந்திருக்கிறது.

ஆரியபட்டர் காலத்தில் பூமி கோளவடிவம் கொண்டதாகக் கருதப்பட்டது. பூமியின் ஈர்ப்பு விசையால் மனிதன், விலங்கு, மரம் ஆகியவை பூமியோடு ஒட்டிக் கொண்டிருப்பதாக ஆரியபட்டர் கூறியிருக்கிறார். அதற்கு பின்னர் வந்த பிரமகுப்தா, பாஸ்கராச்சாரியர் பூமியின் ஈர்ப்பு விசை குறித்த மேம்பட்ட கருத்துகளை முன்வைத்தனர்.

அரிஸ்டாட்டில் கிராவிட்டி, லெவிட்டி என்ற இரு ஈர்ப்புத் தன்மைகள் குறித்து கூறினார். பீரங்கி குண்டுகள் செல்லும் பாதை நேர்கோடு என்று அவர் சொன்னதை டார்ட்டாக்ளியா மறுத்தார்.

கலிலியோ வெவ்வேறு எடை கொண்ட பொருள்கள் மேலிருந்து கீழே விழும்போது ஒரே வேகத்தில் விழும் என்று புவியீர்ப்பு விசை தொடர்பாக புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

சூரியனை கோள்கள் சுற்றிவருவதும் பெரும் விசையின் முடுக்கத்தால்தான் என்று கெப்லர் கூறினார். அதன் பின்னர் நியூட்டனின் இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவு மூன்று விதிகளாக உருவெடுத்தன.

ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம் ஒளியின் வேகத்தைவிட எந்தப் பொருளும் அதிக வேகத்தில் போக முடியாது என்று கூறியது. ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னரும் நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றங்களையும் இந்நூல் விளக்குகிறது. அறிவியல்பூர்வமாக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தரும் நூலாகவும் இது இருக்கிறது.

ஆரியபட்டரிலிருந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை ஈர்ப்பு விசை சுருக்கமான வரலாறு - த.வி.வெங்கடேஸ்வரன்; பக்.176; ரூ.250; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி; ✆04259-236030.

பூமியின் ஈர்ப்பு விசை தொடர்பான வரலாற்று பூர்வமான, அறிவியல்பூர்வமான பதிவு இந்நூல். பூமி தட்டையானது என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது. ஆனால் இந்த கருதுகோளே அன்றைக்குப் பெரும் சாதனையாக இருந்திருக்கிறது.

ஆரியபட்டர் காலத்தில் பூமி கோளவடிவம் கொண்டதாகக் கருதப்பட்டது. பூமியின் ஈர்ப்பு விசையால் மனிதன், விலங்கு, மரம் ஆகியவை பூமியோடு ஒட்டிக் கொண்டிருப்பதாக ஆரியபட்டர் கூறியிருக்கிறார். அதற்கு பின்னர் வந்த பிரமகுப்தா, பாஸ்கராச்சாரியர் பூமியின் ஈர்ப்பு விசை குறித்த மேம்பட்ட கருத்துகளை முன்வைத்தனர்.

அரிஸ்டாட்டில் கிராவிட்டி, லெவிட்டி என்ற இரு ஈர்ப்புத் தன்மைகள் குறித்து கூறினார். பீரங்கி குண்டுகள் செல்லும் பாதை நேர்கோடு என்று அவர் சொன்னதை டார்ட்டாக்ளியா மறுத்தார்.

கலிலியோ வெவ்வேறு எடை கொண்ட பொருள்கள் மேலிருந்து கீழே விழும்போது ஒரே வேகத்தில் விழும் என்று புவியீர்ப்பு விசை தொடர்பாக புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

சூரியனை கோள்கள் சுற்றிவருவதும் பெரும் விசையின் முடுக்கத்தால்தான் என்று கெப்லர் கூறினார். அதன் பின்னர் நியூட்டனின் இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவு மூன்று விதிகளாக உருவெடுத்தன.

ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம் ஒளியின் வேகத்தைவிட எந்தப் பொருளும் அதிக வேகத்தில் போக முடியாது என்று கூறியது. ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னரும் நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றங்களையும் இந்நூல் விளக்குகிறது. அறிவியல்பூர்வமாக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தரும் நூலாகவும் இது இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.