ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சகலகலா சனீஸ்வரன்

மதுரையில் கோவலன் தலை துண்டிக்கப்பட்டதும் சனீஸ்வரனின் சூழ்ச்சியே என்கிறார் நூலாசிரியர்.

News image
Updated On :10 மார்ச் 2025, 12:33 pm

DIN

சகலகலா சனீஸ்வரன்- பொ. பொன்முருகன்; பக்.137; ரூ.170; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை -94; ✆044 - 4507 4203.

நவக்கிரகங்களில் எல்லாரும் பயப்படும் சனீஸ்வரரைப் பற்றிய நூல் இது . இந்நூலின் தொடக்கத்திலேயே சனீஸ்வரர் தண்டிப்பவர் அல்ல; அவர் நீதிமான்; நமக்கு உலகத்தின் நல்லவை கெட்டனவற்றைப் புரிய வைத்து நம்மை நல்வழிப்படுத்த உள்ள கிரகம் என்றால் அது சனீஸ்வரர்தான் என சொல்கிறார்.

மேலும் இதிகாசங்களான மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம், நளதமயந்தி கதை போன்றவற்றில் நிகழும் சம்பவங்களுக்கு சனி பகவான் காரணமாக இருந்ததை நூல் விளக்குகிறது. உதாரணமாக கோவலன் கண்ணகியைப் பிரிந்ததும், மாதவியைச் சேர்ந்ததும், மதுரையில் கோவலன் தலை துண்டிக்கப்பட்டதும் எல்லாம் சனீஸ்வரனின் சூழ்ச்சியே என்கிறார் நூலாசிரியர்.

சனிபெயர்ச்சியின் வகைகள், அதன் விளைவுகள், அதற்கான எளிய பரிகார ஸ்தலங்கள் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், குச்சனூர் சனீஸ்வரன் கோயில், திருக்கொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில், மத்திய பிரதேசம் இந்தூர் சனிபகவான் ஆலயம், திருகோணமலை சனீஸ்வரன் ஆலயம் உள்ளிட்ட பல சனீஸ்வரன் கோயில் பற்றிய விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

வாழ்வில் திடீரென ஏற்படும் சறுக்கல்களும், இடம் மாற்றங்களும், இழப்புகளும், சனியால் விளைந்ததே என்றும், வாழ்வு தரும் படிப்பினை புரிந்ததும் இழந்தவை அனைத்தையும் மீட்டுத் தருபவரும் அவரே எனவும் நூல் கூறுகிறது.

சகலகலா சனீஸ்வரன்- பொ. பொன்முருகன்; பக்.137; ரூ.170; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை -94; ✆044 - 4507 4203.

நவக்கிரகங்களில் எல்லாரும் பயப்படும் சனீஸ்வரரைப் பற்றிய நூல் இது . இந்நூலின் தொடக்கத்திலேயே சனீஸ்வரர் தண்டிப்பவர் அல்ல; அவர் நீதிமான்; நமக்கு உலகத்தின் நல்லவை கெட்டனவற்றைப் புரிய வைத்து நம்மை நல்வழிப்படுத்த உள்ள கிரகம் என்றால் அது சனீஸ்வரர்தான் என சொல்கிறார்.

மேலும் இதிகாசங்களான மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம், நளதமயந்தி கதை போன்றவற்றில் நிகழும் சம்பவங்களுக்கு சனி பகவான் காரணமாக இருந்ததை நூல் விளக்குகிறது. உதாரணமாக கோவலன் கண்ணகியைப் பிரிந்ததும், மாதவியைச் சேர்ந்ததும், மதுரையில் கோவலன் தலை துண்டிக்கப்பட்டதும் எல்லாம் சனீஸ்வரனின் சூழ்ச்சியே என்கிறார் நூலாசிரியர்.

சனிபெயர்ச்சியின் வகைகள், அதன் விளைவுகள், அதற்கான எளிய பரிகார ஸ்தலங்கள் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், குச்சனூர் சனீஸ்வரன் கோயில், திருக்கொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில், மத்திய பிரதேசம் இந்தூர் சனிபகவான் ஆலயம், திருகோணமலை சனீஸ்வரன் ஆலயம் உள்ளிட்ட பல சனீஸ்வரன் கோயில் பற்றிய விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

வாழ்வில் திடீரென ஏற்படும் சறுக்கல்களும், இடம் மாற்றங்களும், இழப்புகளும், சனியால் விளைந்ததே என்றும், வாழ்வு தரும் படிப்பினை புரிந்ததும் இழந்தவை அனைத்தையும் மீட்டுத் தருபவரும் அவரே எனவும் நூல் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.