ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சமூக நீதிப் போராளிகள்

கல்வி நிலையங்களிலும், இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

News image
Updated On :17 மார்ச் 2025, 9:31 am

DIN

சமூக நீதிப் போராளிகள் - ஜெகதா; பக்.244; ரூ.260; சத்யா என்டர்பிரைசஸ், சென்னை-94; ✆ 044- 4507 4203.

மனித உரிமைகளுக்கும், சமூக நீதிக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது என்று கூறும் நூலாசிரியர், சமூக நீதிக்காகப் போராடியவர்களின் வரலாற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, போராட்டங்களின் மூலமாகவும், சட்ட ரீதியாகவும் பாடுபட்ட போராளிகளின் உச்சபட்ச குரலொலிகளின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது.

'நீதி என்ற சொல்லுக்கு கட்டு அல்லது பிணைத்தல் என்று பொருளாகும். சமூக நீதி என்பது மக்களுக்கு இடையே சமத்துவம், பல்வேறு சமூக அம்சங்களின் தாரசு நிலை பார்வையை மையம் கொண்டதாக அர்த்தப்படுகிறது' என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

அந்த வகையில், 18 போராளிகளின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்கள் போன்றவை தொகுக்கப்பட்டுள்ளன. புலையர் இனத்தைத் தீண்டாமைத் தளையில் இருந்து அகற்ற போராடிய கேரளத்தைச் சேர்ந்த மகாத்மா அய்யன்காளி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் முகங்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், கன்னியாகுமரியைச் சேர்ந்த அய்யா வைகுண்டர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜோதிராவ் புலே, ஆன்மிகக் குரு ஸ்ரீநாராயண குரு, உள்ளிட்ட 18 போராளிகளின் வரலாறு வியக்க வைக்கிறது.

தேசிய அளவிலும், தமிழகத்திலும் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையப் பாடுபட்ட இவர்களின் வரலாற்றை இளையத் தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியமானதாகும்.

கல்வி நிலையங்களிலும், இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

சமூக நீதிப் போராளிகள் - ஜெகதா; பக்.244; ரூ.260; சத்யா என்டர்பிரைசஸ், சென்னை-94; ✆ 044- 4507 4203.

மனித உரிமைகளுக்கும், சமூக நீதிக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது என்று கூறும் நூலாசிரியர், சமூக நீதிக்காகப் போராடியவர்களின் வரலாற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, போராட்டங்களின் மூலமாகவும், சட்ட ரீதியாகவும் பாடுபட்ட போராளிகளின் உச்சபட்ச குரலொலிகளின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது.

'நீதி என்ற சொல்லுக்கு கட்டு அல்லது பிணைத்தல் என்று பொருளாகும். சமூக நீதி என்பது மக்களுக்கு இடையே சமத்துவம், பல்வேறு சமூக அம்சங்களின் தாரசு நிலை பார்வையை மையம் கொண்டதாக அர்த்தப்படுகிறது' என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

அந்த வகையில், 18 போராளிகளின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்கள் போன்றவை தொகுக்கப்பட்டுள்ளன. புலையர் இனத்தைத் தீண்டாமைத் தளையில் இருந்து அகற்ற போராடிய கேரளத்தைச் சேர்ந்த மகாத்மா அய்யன்காளி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் முகங்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், கன்னியாகுமரியைச் சேர்ந்த அய்யா வைகுண்டர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜோதிராவ் புலே, ஆன்மிகக் குரு ஸ்ரீநாராயண குரு, உள்ளிட்ட 18 போராளிகளின் வரலாறு வியக்க வைக்கிறது.

தேசிய அளவிலும், தமிழகத்திலும் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையப் பாடுபட்ட இவர்களின் வரலாற்றை இளையத் தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியமானதாகும்.

கல்வி நிலையங்களிலும், இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.