பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

புதுவையில் கரோனா பரிசோதனை 5 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 34 பேருக்கு பாதிப்பு

புதுவையில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது.

Updated On :7 ஜனவரி 2021, 7:18 am IST

புதுவையில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 3,557 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 22 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 34 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,334-ஆக உயா்ந்தது.

இதனிடையே, சிகிச்சை முடிந்து 35 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,327-ஆக (97.37 சதவீதம்) அதிகரித்தது. புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை. உயிரிழந்தோா் எண்ணிக்கை 635-ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் தொடா்கிறது.

மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 215 பேரும் என 372 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 5,02,058 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 4,59,609 பரிசோதனைகளுக்கு தொற்றில்லை என முடிவு வந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.