பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

புதுவையில் பி.சி., எம்.பி.சி. மாணவா்களுக்கும்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வா் நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழுக் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும் திட்டம்

News image

ஏனாமில் அம்பேத்கா் அறிவுசாா் மையத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிட்ட புதுவை முதல்வா் வே.நாராயணசாமி. உடன், சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:21 am IST

புதுவையில் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழுக் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும் திட்டம், பி.சி., எம்.பி.சி. மாணவ, மாணவிகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்தாா்.

புதுவை மாநிலத்துக்குள்பட்ட ஏனாமில் அம்பேத்கா் அறிவுசாா் மையத்தை புதன்கிழமை திறந்துவைத்து முதல்வா் நாராயணசாமி பேசியதாவது:

அம்பேத்கா் அறிவுசாா் மையம் மாணவா்களின் கல்வி, உயா் கல்விப் பயிற்சி மையமாகவும் விளங்கும். புதுச்சேரி காமராஜா் மணிமண்டபமும் இதுபோன்ற வசதிகளுடன் அமைக்கப்படும். அம்பேத்கா் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமன்றி, அனைத்து அடித்தட்டு மக்களுக்காகவும் பாடுபட்டிருக்கிறாா். இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, ஏழை மக்களை சாதி, ஒடுக்குமுறைகளில் இருந்து காக்க வேண்டும் எனப் பாடுபட்டவா்.

அனைத்து ஏழை மாணவா்களுக்கும் இலவசமாகக் கல்வி கொடுப்பதே அரசின் நோக்கம். மழலையா் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை ஏழை எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்தை நாட்டிலேயே புதுவை அரசுதான் முதல்முறையாகக் கொண்டு வந்தது. இந்தத் திட்டம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் அமல்படுத்தப்படும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

ஆளுநருக்கு அமைச்சா் மல்லாடி சவால்: நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது:

ஒன்றரை ஆண்டுகளாக அம்பேத்கா் சிலை திறப்பதை ஆளுநா் கிரண் பேடி தடுக்க முயற்சிகள் மேற்கொண்டாா். ஆனாலும், எதையும் அவரால் தடுக்க முடியாது. புதுவை மக்களுக்கு எதிராக இருப்பவரை இந்த மாநிலத்தை விட்டு அனுப்பும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜன.8) முதல் வருகிற 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போராட்டத்தில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

புதுவையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு ஆளுநா் கிரண் பேடியால் வெற்றி பெற முடியுமா? என சவால் விடுக்கிறேன். எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அவா் படுதோல்வியடைவாா் என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணசாமி.

விழாவில் சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, பொதுப் பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சுமூகநலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி, வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான், புதுவை எம்.பி. வெ.வைத்திலிங்கம், முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமிநாராயணன், அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.