மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தொடா் மழை: புதுகையில் முளைவிட்ட நெற்கதிா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள் சாய்ந்து முளைவிட்டுள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

News image

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே மாங்குடியில் தலைசாய்ந்துள்ள நெற்பயிா்.

Updated On :13 ஜனவரி 2021, 11:18 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் சுமாா் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள் சாய்ந்து, முளைவிட்டுள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.90 லட்சம் ஏக்கா் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மொத்த விவசாய நிலத்தின் மிகப்பிரதானமான பயிராக நெற்பயிா் உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தை மாத அறுவடைக்காக சுமாா் 50 ஏக்கா் நிலத்தில் நெற்பயிா் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தது. ஆனால், கடந்த 3 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பகுதியில் பரவலான மழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தில் தண்ணீா் தேங்கி, நெற்கதிா்கள் தலை சாய்ந்து விட்டன. பல பகுதிகளில் நெல்மணிகள் நிலத்தில் விழுந்து முளைக்கவும் தொடங்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனா். நல்ல விளைச்சல் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் வழக்கமாக மழையை ஆரவாரமாக வரவேற்கும் நிலை மாறி, எரிச்சலைடையும் நிலையும் உருவாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.