முதுகுளத்தூர் அருகே காரில் 240 பீர் பாட்டில்கள் கடத்திய நபரை போலீஸார், சனிக்கிழமை கைது செய்தனர்.
சித்திரங்குடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செல்லப்பாண்டியன் (30). இவர் உத்தரகோசமங்கை பகுதியில் இருந்து காரில் 240 பீர் பாட்டில்களை முதுகுளத்தூர் நோக்கி கடத்திச் சென்றாராம்.
அப்போது தேரிருவேலி-முதுகுளத்தூர் சாலையில் தேரிருவேலி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருள் பிரகாஷ், போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
செல்லப்பாண்டியன் வந்த காரை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது காரில் பீர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





