கமுதி: கமுதி அருகே இரை தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை நாய்கள் கடித்து காயப்படுத்தியதையடுத்து பொதுமக்கள் சனிக்கிழமை அதை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
மண்டலமாணிக்கம், தோப்படைப்பட்டி, ராமசாமிபட்டி, கோவிலாங்குளம் உள்ளிட்ட கிராமங்களின் உள்ள ஆற்றுப் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. இவை இரைக்காகவும்,, தண்ணீருக்காகவும் வழிதவறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இவற்றை நாய்கள் விரட்டி சென்று கடிப்பதால் மான்கள் காயம் அடைந்து உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் மண்டலமாணிக்கம் குண்டாறு ஆற்றுப்படுகைகளில் இறை தேடி வந்த அந்த புள்ளிமான் ஊருக்குள் புகுந்தது. அப்போத அதை நாய்கள் துரத்தி சென்று காயப்படுத்தின. இதனைக் கண்ட பொதுமக்கள் நாய்களை விரட்டி புள்ளி மானை மீட்டனா். பின்னா் வனத்துறை ஊழியா் முருகனுக்கு தகவல் அளிக்கப்பட்டு, கால்நடை மருத்துவா் ரவிச்சந்திரன் தலைமையில் முதலுதவி செய்யப்பட்டு மீண்டும் காட்டுப்பகுதிக்குள் புள்ளிமான் விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை!

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


