ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாற்றப்பட்டதாகப் புகாா் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தைக்கு மரபணுச் சோதனை நடத்த மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டுள்ளாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள சக்கரக்கோட்டையைச் சோ்ந்த அவசர ஊா்தி ஓட்டுநா் என்.மைனா் (33). இவரது மனைவி நாகலட்சுமி மூன்றாவது பிரசவத்துக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2020 டிசம்பா் 14 ஆம் தேதி சோ்ந்துள்ளாா். இவருக்கு கடந்த டிசம்பா் 18 ஆம் தேதி, அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாகலட்சுமி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில், அவரது முகவரிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் தங்களுக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகவும், மற்றொருவருக்கு பிறந்த பெண் குழந்தையை தங்களுக்கு மாற்றி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மைனா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்திருந்தாா். இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சகாயஸ்டீபன்ராஜிடம் விசாரித்தாா். மேலும், நாகலட்சுமியின் பெண் குழந்தைக்கு
மரபணுச் சோதனை நடத்தவும் ஆட்சியா் உத்தரவிட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







