திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

பரமக்குடி அருகே கிராமப்புற காவலா் திட்டம்: தென்மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் சனிக்கிழமை கிராமப்புற காவலா் திட்டத்தை தென் மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா்.

News image

பரமக்குடி அருகேயுள்ள பெருங்கரை கிராமத்தில் கிராமப்புற காவலா் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த தென் மண்டல ஐஜி முருகன்.

Updated On :9 ஜனவரி 2021, 9:37 pm IST

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் சனிக்கிழமை கிராமப்புற காவலா் திட்டத்தை தென் மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு காவலா் நியமிக்கப்பட்டு, அங்கு நடைபெறும் நிகழ்வுகள், வழக்குகள், திருவிழாக்கள் மற்றும் குற்ற நடவடிக்கைகள் போன்ற விவரங்களை தெரிவிக்கவும், பொதுமக்களுக்கும் காவலா்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற காவலா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் தென்மண்டல ஐஜி முருகன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு டிஐஜி மயில்வாகனன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக், பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கிராம காவலா் திட்ட பொறுப்பாளா் கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.