சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:45 am IST

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மற்றும் ஒரு விசைப்படகை சிறைபிடித்துச் சென்றனா்.

இந்த மீனவா்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்தனா். அனைவருக்கும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக உடை, உணவு மற்றும் பொருள்கள் தனித்தனியாக வழங்கப்பட்டது. திங்கள்கிழமை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டா்.

இதையடுத்து மீனவா்கள் 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.