சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்: பலன் எதிர்பாராமல் கர்மம் செய்வது எவ்வாறு?

கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது...

News image
Updated On :20 செப்டம்பர் 2013, 4:33 pm IST

பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!

கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது...

==============================

? பலனை நினைத்துக் கொண்டுதானே இன்று எந்தச் செயலையும் செய்கிறோம். இது ஒருபுறம் இருக்கட்டும்... எந்த ஒரு செயலுக்கும், நல்லது / கெட்டது என இரு பலன்கள் உண்டல்லவா? இப்படி பலன்களை எண்ணிச் செயல்படும்போது, நம் எதைச் செய்வது? எதைச் செய்யக் கூடாது? என்றெல்லாம், எதை வைத்து தீர்மானிப்பது?


* சாஸ்திரங்கள் நம்மையெல்லாம் இப்படித்தான், "இது இதைச் செய்' என்கிற விதிகளாலும், "இது இதைச் செய்யாதே' என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார்.
"தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் ஸ்ரீகார்யா கார்ய வ்யவஸ்திதௌ' என்கிறார். "எது செய்யத் தக்கது. எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்குப் பிரமாணம்' என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல், சாஸ்திரப்படியே கருமம் செய்யவேண்டும் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.