இது குறித்து மாமன்னர் திருமலை நாயக்கர்-வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாடு மற்றும் அறக்கட்டளை பாதுகாப்பு பேரவையின் நிறுவனத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வருக்கும், தொல்லியல் துறை ஆணையருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தமிழ்நாட்டில் 108 வைணவ திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முற்கால சேர, சோழ, பாண்டியர்களாலும் பிற்கால மூவேந்தர்களாலும் கட்டப்பட்டது. அதற்குப் பின்னர் விஜயநகர மன்னர்களால் எல்லா கோவில்களும் புனரமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது. இவர்கள் யாவரும் செய்த கோவில் திருப்பணிகள் முழுவதும் அந்தந்தக் கோவில்களின் சுவற்றில் கல்வெட்டுகளாகவும், செப்புத் தகட்டிலும் அவர்கள் செய்த தானங்களையும் குறித்து வைத்துள்ளார்கள். சில காலங்களில் ஓலைச் சுவடிகளிலும் எழுதி வைத்துள்ளார்கள்.