திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு வெயிலுகந்தம்மன் கோயிலில் திங்கட்கிழமையன்று ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2015, 5:58 am

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு வெயிலுகந்தம்மன் கோயிலில் திங்கட்கிழமையன்று ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதிகாலை 5.55 மணிக்கு கடக லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை ஆணையர் தா.வரதராஜன், அலுவலக கண்காணிப்பாளர் கு.கோமதி, இளநிலை பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், திருவிழா பணியாளர் கோ.வெங்கடேசன், மணியம் தமிழரசன், சிவா உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள்  மற்றும் பக்தர்கள் தேர் இழுத்தனர். இரவு அம்மன் அலங்காரச் சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.