ஸ்ரீலஸ்ரீ ஆற்று சுவாமிகளின் 37-வது ஆண்டு மகாகுரு பூஜை விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் பூண்டியில் உள்ள ஆசிரம வளாகத்தில் நவம்பர் 13 அன்று நடைபெறுகின்றது. இந்த மகான் அமர்ந்த நிலையிலேயே எழுந்து ஒரு அடிகூட நடக்காமல் 19 வருடகாலம் தன்னை தரிசிக்க வருகின்ற லட்சோப லட்சம் அன்பர்களுக்கு அருள்பாலித்து அவரவர் குறைகளை நீக்கி நல்வழிப்படுத்தினால் என்பது குறிப்பிடத்தக்கது. குரு பூஜை நிகழ்ச்சிகள் காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் மகாபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகின்றது. ஏற்பாடுகளை ஆசிரம கமிட்டியினர் விரிவாகச் செய்துள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு 9345661184 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.