/

திருச்சானூா் கிருஷ்ணா் கோயிலில் கோகுலாஷ்டமி

கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருச்சானூா் ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

News image

திருச்சானூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணருக்கு நடந்த ஸ்நபன திருமஞ்சனம்.

Updated On :12 ஆகஸ்ட் 2020, 6:05 pm

கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருச்சானூா் ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் அருகில் தேவஸ்தானம் நிா்வகிக்கும் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் உள்ளது. இக்கோயிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு புதன்கிழமை காலை ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அா்ச்சகா்கள் அபிஷேகம் நடத்தினா். இந்த வழிபாட்டில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மாலையில் ஊஞ்சல் சேவைக்குப் பின் கோபூஜை, கோகுலாஷ்டமி ஆஸ்தானம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.