தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருவெம்பாவை - பாடல் 20

அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகத் திகழும் உனது திருவடித் தாமரையை

News image
Updated On :4 ஜனவரி 2018, 5:37 am

DIN

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்


பாடியவர் - பொன் முத்துக்குமரன்
 

விளக்கம்

இந்தப் பாடல் முழுவதும் இறைவனின் திருவடிப் பெருமையை பேசுகின்றது. ஐந்து தொழில்களையும் இறைவன் செய்யும் தன்மையை, இறைவனின் திருவடிகளுக்கு ஏற்றி, தோற்றமாகவும், போகமாகவும் (இன்ப துன்பங்களை அளித்து காக்கும் நிலை), ஈறாகவும், மறைந்து இருக்கும் பொருளாகவும், அனைத்து உயிர்களும் உய்வதற்கான வழியாகவும் விளங்கும் தன்மை இங்கே கூறப்படுகின்றது. திருவடிகளை நாம் பற்றிக்கொண்டால் தான் உய்யமுடியும் என்பதால், இறைவன் கருணை கூர்ந்து அவனது திருவடிகளை, நாம் பற்றிக்கொள்வதற்கு ஏதுவாக, நமக்கு அருள வேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கப்படுகின்றது.

பொருள்

எங்கள் தலைவனே, அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகத் திகழும் உனது திருவடித் தாமரையை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களுக்கும் இறுதியாக இருக்கும் சிவந்த மலர் போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்து உயிர்களையும் தோற்றுவிக்கும் பொன்னான திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களையும் காத்தும், இன்ப துன்பங்களை நுகரச் செய்தும் அருள் புரியும் பூ போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்குவதற்கு உரிய இடமாக விளங்கும் திருவடியை எமக்கு அருள்வாயாக. திருமாலும் நான்முகனும் கண்டு அறியமுடியாத தாமரை போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. எங்களை எல்லாம் ஆட்கொண்டு உய்விக்கும் பொன் மலர் போன்ற திருவடிகளை எமக்கு அருள்வாயாக. நாங்கள் செய்யும் மார்கழி நீராடலும், பாவை நோன்பும் உமது அருள் எங்களுக்கு கிட்டுவதற்கு வழி வகுக்க வேண்டும். மார்கழி நீராடலையும், உம்மையும், உமது திருவடிகளையும், இறைவனே நாங்கள் போற்றுகின்றோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.