சென்னை ராயபுரத்தில் வலம்புரி விநாயகர் சிலை, அம்மன் சிலையாக உருமாறி காட்சியளித்ததாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ராயபுரத்தில் குமாரசாமி தெருவைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் வீட்டு வாசலில் உள்ள வலம்புரி விநாயகர் சிலை அம்மன் சிலையாக உருமாறியுள்ளதாக தகவல்கள் பரவியது.
இதனை அப்பகுதியில் இருந்த சிறுவர்கள் பார்த்து பலருக்கு தகவல் பரப்பியுள்ளனர். இதையடுத்து, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிலையைக் காண திரண்டனர்.
அப்பகுதியில் கூட்டம் அதிகம் கூடியதால் ராயபுரம் காவல்துறையினர் அங்கு வந்த பக்தர்கள் அனைவரையும் வரிசையாகச் செல்லுமாறு அறிவுறுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
வலம்புரி விநாயகர், அம்மனாக மாறியதை பார்த்த பலரும் தங்களின் செல்போனில் படம் பிடித்தனர். சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர். ராயபுரத்தில் உள்ள சேனியம்மன்தான் விநாயகர் சிலையில் இறங்கி இருப்பதாக அங்குள்ள பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



