உலக நன்மைக்காக காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஹோமத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா திங்கள்கிழமை கலந்துகொண்டார்.
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உலக நன்மைக்கென கடந்த 9ஆம் தேதி முதல் வரும் 18ஆம் தேதி வரை பல்வேறு வகையான ஹோமங்கள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, கோயில் ஸ்தானிகர் நடராஜசாஸ்திரி தலைமையில் தக்ஷிணகாளி ஹோமம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு வழிபட்டார். அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
உலக நன்மைக்காக நடத்தப்படும் ஹோமத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது, தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. எனவே, உலக நன்மைக்கென நடத்தப்பட்ட ஹோமத்தில் தமிழக மக்களின் பிரச்னைகள் தீர்ந்து அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தித்தேன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இது தொடர்பாக அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார் லதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


