திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு பசு மாடு திருமலைக்கு நடைபாதை வழியாக படியேறி வந்தது பக்தர்களிடையே வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
திருமலைக்கு நடைபாதை வழியாக இதுவரை பக்தர்கள் மட்டுமே நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு பசு மாடு மலை அடிவாரப் பகுதியில் உள்ள அலிபிரியில் இருந்து நடைபாதை வழியாக நடந்து படியேறியது. ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த சனிக்கிழமை அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. நடைபாதை வழியாக வந்த பக்தர்கள் பசு ஒன்று அதே வழியாக வருவதை கண்டு வியப்படைந்தனர். நடந்து செல்லும் பக்தர்களுக்கு அது ஊறு விளைக்கும் என்று நினைத்து அதை விரட்டினர். எனினும், அந்த மாடு விலகிச் செல்லாமல் நடைபாதையில் தொடர்ந்து மேலே ஏறியது. அது உடன் வந்த பக்தர்களுக்கும் எவ்வித தீங்கும் விளைக்கவில்லை.
இதைக் கண்ட பக்தர்கள் அவ்வாசாரிகோணே பகுதியில் உள்ள கண்காணிப்பு ஊழியர்களிடம் இது தொடர்பாக தகவல் அளித்தனர். கண்காணிப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, அந்தப் பசுவைப் பாதுகாப்பாக நடைபாதை வழியாக அழைத்து வந்து திருமலையில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


