திருவோண நட்சத்திரமான இன்று மகாவிஷ்ணுவை தரிசித்து, வாழ்வில் நல்ல திருப்பங்களை பெறுவோம்.
மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. மகாவிஷ்ணுவுக்கு உகந்த உன்னதமான நாள் இந்த நாள்.
அதிகாலையில் நீராடி, கடவுளைத் துதித்து, அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசிமாலை அணிவிக்கலாம். கோயிலுக்குப் போக நேரமில்லாதவர்கள் வீட்டில் உள்ள பெருமாளின் படத்திற்கு துளசி மாலையையோ அல்லது வேறு உகந்த புஷ்பத்தையோ அணிவித்து, மனதார பிராத்திக்கலாம். .
பின்னர், இன்று உண்ணப்போகும் உணவுப் பொருள் எதுவாக இருப்பினும், அதில் எந்த ஒரு ரூபத்திலும் துளியளவு கூட உப்பு சேர்க்காமல், உண்ண வேண்டும். ஒரு வேளை அரிசி உணவும், மற்ற வேளைக்கு, சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
திருவோண விரதத்தை (ஸ்ரவண விரதம்) என்றும் அழைக்கப்படுகிறது. மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் தடைப்பட்ட காரியங்களை நல்ல முறையில் விரைவில் நடத்தித் தருவார் நாராயணன். வேண்டியது நிறைவேறும் என்பது திண்ணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆனி கிருத்திகை: ராஜ அலங்காரத்தில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி

மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு மகிழ்வுறு ஆங்கிலம் திட்டம்: அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்தாா்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பயனா்களை ‘அடிமையாக்கும்’ அம்சங்களை முடக்க வேண்டும்!







