இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சிம்மாசலம் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

சிம்மாசலத்தில் உள்ள ஸ்ரீவராக லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருமலை தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.

News image

சிம்மாசலம் ஸ்ரீவராக லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு பட்டு வஸ்திரம் கொண்டு செல்லும் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:10 am IST

சிம்மாசலத்தில் உள்ள ஸ்ரீவராக லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருமலை தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், சிம்மாசலத்தில், புகழ்பெற்ற ஸ்ரீவராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும், அக்ஷய திருதியை அன்று சந்தனோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, புதன்கிழமை அக்ஷய திருதியையொட்டி, அக்கோயிலில் சந்தனோற்வ விழாவை கோயில் நிர்வாகம் நடத்தியது. இதில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவின்போது, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது. தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று, கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். கடந்த, 1996-ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானம் இக்கோயிலுக்கு பட்டு வஸ்திரத்தை சமர்ப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் கோயிலில்66,124 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை மட்டும் 66,124 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 23,353 பேர் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர். 
புதன்கிழமை காலை 5 மணி நிலவரப்படி, வைகுண்டத்தில் உள்ள ஒரு காத்திருப்பு அறையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 4 மணி நேரம் தேவைப்பட்டது. நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானைத் தரிசித்தனர். 
டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால் அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டு வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 

உண்டியல் காணிக்கைரூ. 3.21 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.21 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 3.21 கோடி வசூலானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.