

மானாமதுரையில் ஆனந்தவள்ளி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வெண்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்.
சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வாகன வைகை ஆற்றில் வீர அழகர் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. குதிரை வாகனத்தில் புறப்பட்ட வீர அழகருக்கு ஆனந்தவல்லி-சோமநாதர் ஆலயத்தின் முன்புறம் வெண்கொற்ற குடைபிடித்து வரவேற்பளிக்கப்பட்டது.
கோயில் முன்புறம் வைகை ஆற்றில் வெண்பட்டு உடுத்தி கோவிந்தா கோஷங்களுக்கு இடையே வீரஅழகர் இறங்கினார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.