ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 90,682 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 90,682 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் 40,272 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். திங்கள்கிழமை காலை 5 மணி நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள 28 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
அவர்களின் தரிசனத்திற்கு 10 முதல் 12 மணிநேரம் தேவைப்பட்டது. நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி 14 ஆயிரம் பேர், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம் பேர்) திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.